Saturday, October 1, 2011

விநாயகபுரத்தில் சிறார்கள் கௌரவிப்பு





சர்தேச சிறார் தினமான ஒக்ரோபர் முதலாம் நாள் கிளிநொச்சி
விநாயகபுரத்தில் சிறுவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள்
ஆலயத்தில் இருந்து மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக
அழைத்துவரப்பட்டு விநாயகபுரம் முன்பள்ளி மண்டபத்தில்
முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளர் பொன்.காந்தன் கரைச்சி
பிரதேச சபை உப தவிசாளர் நகுலேஸ்வரன் அச்சபையின்
உறுப்பினர் சேதுபதி கிராமசேவகர் சேந்தன் கிராம அ.சங்க செயலாளர்
மற்றும் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் கலந்துகொண்டு
சிறுவர்களுக்கு அன்பளிப்புக்களை வழங்கிவைத்து வாழ்த்துக்களை
தெரிவித்தனர்.