Tuesday, July 24, 2012

கண்களின் விருந்து


பொன்.காந்தன்



இதயத்தை தொடும் வரை இருந்தேன் -உன்
இரு விழி அசைவினில் கலந்தேன்
உனக்கென மறுமுறை பிறந்தேன் -உன்
முகவரி எதுவென அலைந்தேன்

விழியினில் ஒரு நதியோடும் -என்
விடுமுறை நாட்களை தேடும்
கனவுகள் ஆயிரம் கோடி -உனை
சேர்ந்திடும் வாசல்கள் தேடி


சுகமென நானுனை வரைந்தேன்
சொர்க்கங்கள் ரசித்தன என்னை
இனிமைகள் இறைவனின் பரிசு -அதில்
உயர்ந்தது உன்னிடம் இருக்கிற மனசு

பொழிவது மழையென இருந்தேன் -உன்
பூமுகம் சில்லிட வியந்தேன்
விழிகளில் இத்தனை மலரா -நீ
வெண் மதி சூடிடும் அழகா
உன் விடை எழுத கேள்விகள் கோடி
உருகுது கவிதை உன் மடி தேடி


அர்ச்சுனன் வில்லை திருடிய கண்கள் 
ஆதாம் இன்னும் சுவைத்திடும் கனிகள்
காமன் எழுதிய கடைசி கவிதை
காதல் கொடுத்த காதல் பரிசு
யாதும் நீயே ஆனதினாலே
ஆண்களின் தவங்கள் அழகென ஆச்சு


நீ இந்திர லோக தேவதை இல்லை
மந்திரம் செய்த மாயமும் இல்லை
தூரிகை செய்த ஜாலமும் இல்லை
காதல் தந்த கண்களின் விருந்து