சாமான்ய மன்னனின் பயணக்குறிப்பு ....................
-பொன்.காந்தன்
எனக்கு
மூன்று புரவிகள் வேண்டும
திக் விஜயம் போ
ஒன்று பூக்களோடு செல்ல
ஒன்று வாளோடு
செல்ல
ஒன்று எதுவுமற்று .......
மன்னர்களே
!
மன்னர்களே
!
உங்கள் சாம்ராஜ்யமும்
சேடிகளும்
அந்தபுரங்களும்
எனக்கு
தேவைப்படாது
நீங்கள்
எழுப்பிய
காவல் கோபுரங்கள்
மந்திரிகள்
ஒற்றர்கள்
எல்லாம்
பெருமைக்குரியவை ....
எல்லாமும்
உங்களுக்கு தேவை
துயர் அறியா உங்கள் நெஞ்சமும்
துளி அறியா விழிகளும்
இந்த உலகத்துக்கு தேவை.
மன்னர்களே
!
மன்னர்களே
!
உங்கள்
மனதின் சுவர்களை மட்டும்
அகற்றி
விடுக!
நான் புறப்பட்டு விட்டேன் .