Friday, February 3, 2012

நம் பூக்களை பரவுக..............



-பொன்.காந்தன்

தூக்கம் வரா இரவொன்றில்
துடிக்கின்றன  இந்த வார்த்தைகள்.
ஏக்கப்பெருவெளியில்
மாற்றம் ஒன்று வேண்டுமென்று
மண்மீது ஒரு முறை மண்டியிடுகின்றேன்.
ஆயிரம் வரலாறுகளை அடக்கு வைத்த அன்னைக்கு
அதன் அர்த்தம் புரியுமென்று நினைக்கின்றேன்.
நான் மட்டும் புலம்புகிறேனா
இல்லை இந்த நாடே
புலம்புவதாக எனக்கு படுகின்றது.
ஏட மடயா
உன் பாட்டில் போவென்று யாரும் சொல்கிறானா
ஊர் சோலி ஏனென்று எரிகிறானா
இல்லை
இதை நிச்சயம் எழுதென்று
இடுகின்ற காலக்கட்டளை ஒன்று
என் காதில் விழுகின்றது.
மானம் கெட்டவனே மாற்றானின் கேவலங்கள்
மலையாய் ஏறுகையில்
உன் கவிதையென்ன ஊர்விட்டுப்போயிற்றாவென
வேரடியில் கிடக்கின்ற வேதனை பாய்கிறது.
கோடிக்குள் வந்து கொடியவன் குப்பைகளை கொட்டுகிறான்.
கடைசிவார்த்தைகளால் திட்டினாலும்
இந்தக்கயவர்கள் மீதா ஆத்திரம் அடங்காது
முந்தநாள் எங்கள் ஊரிலொரு கல்யாணம் நடந்தது
தெருவில் நின்ற விசநாகத்தை வீட்டுக்கு அழைத்துவந்து
விருந்துபடைத்தாள் ஒருத்தி.
இன்னும் ஆறாப்புண்ணாக வலிக்கிறது
முள்ளிவாய்க்காலில் மூர்க்கம்.
எண்ணிப்பாருங்கள் எங்கள் கன்னிகளையெல்லாம்
கடல் மணல்வெளியெங்கும் குதறியவர் குலத்தோடு
மலையாளபுரத்தில் குலவுகிறாள் எமதொருத்தி.
கல்லூரி மண்டபமொன்று கல்யாணமண்டபமாகி
இரணியன் ஒருவனுக்கு இளையவள் ஒருத்தி
வாழ்க்கைப்பட்ட பாடத்தை
நம் வெள்ளை சட்டைகளுக்கு விதைக்கிறான்
தென்னிலங்கை தெருநாய்.
நேற்று கல்லறைவரிகளை பாடி காதுக்கு வந்த
குடும்பமொன்று இன்று எல்லாம் சுபமென்று
எட்டப்பர் வட்டத்துள் விழுந்து மல்லாரி இசைக்கிறது.
என்ன நடக்கிறது தெரியுமா
கன்னிகளே கவனம்!
சிங்களக்குட்டிகளை கருக்களில் விதைக்க
பொல்லாத திட்டமொன்று பூக்க ஆரம்பித்துவட்டது.
இன ஒற்றுமை இங்கே எழுந்து நிற்கிறது என்று
உலக ஒப்பனைக்குரைக்க
ஓத்திகை நடக்கிறது.
கொள்ளி வைத்தவனுக்கு எம் வள்ளிமயில்களை
வரைந்துகொடுக்க
எம் வரலாற்று இனம் வயிரம் இழந்துவிட்டதா
மௌனமாய் இருக்கிறார்கள்
எம் மாமேதைகள் பலர்
எதற்கு வாய்திறக்கப்போகிறார்கள்
பள்ளிறைக்கு அனுப்ப வாழ்த்துகிற
கேவலம்
கல்வி அறைகளில் நடக்கிறது
கல்விச்சமுகமோ கண்மூடிக்கிடக்கின்றது.
எதற்குத்திறப்பீர்கள் வாய்
பதவி உயர்வு
இடமாற்றம்
சுற்றறிக்கைகள் பல சுயநலன்களுக்கே வடிவமைக்கப்பட்டிருக்pன்றன.
கற்றவர்கள் கல்வியியலாள்கள்
எம் சமுகம் கையெடுத்துக்கும்பிடுகிற மகாபீடங்கள்
என்று நினைக்கின்ற அனைவரும் செத்துவிட்டார்களா!
ஊமை வருத்தம் பிடித்து ஒடுங்கிப்போய்விட்டார்களா!
கனவுகளோடு வளர்கின்ற பொக்கிசங்களை கயவர்க்கு
கட்டிக்கொடுத்து மாமனாக சம்மதமான மௌனமா இது.
சந்திக்காவலரணில் சிங்கள சிப்பாய்கள் எல்லாம்
தாமெல்லாம் மாப்பிள்ளைகள் என்றுதான்
மனதுக்குள் நினைக்கின்றார்கள்.
என்ன நினைக்கின்றீர்கள் எம் பெருமான்களே!
பதவிகளில் இருக்கும்வரை
தமிழ்தேசியம் பேசுதல் நினைத்தல்
துடக்கென்று முடிவெடுத்து விட்டீர்களா
சரி தேசியம் வேண்டாம்
அது ஏழைகளும் படிக்காதவர்களும்
பேசுகிறதாய் இருக்கட்டும்
அதன் உலகப்புகழை ஓர் வரலாறுரைக்கட்டும்
உங்கள் புதல்விகளில் கைபடாமல்இருக்கவாவது
சமுகச்சீரழிவுக்கு எதிராய் கண்டனங்கள் விடமாட்டீர்களா
தூண்டல் துலங்கல் பற்றி
வுpடியும் வரை விரிவுரை நடத்தக்கூடிய
விண்ணர்கள் எல்லாம்
அலவாங்கால் குத்தினாலும்
ஆடாமல் இருக்கிறார்கள்.
சுரி பிழை சொல்லவேண்டியர்கள்
இப்போது நரி வேசம் போட்டிருக்கின்றார்கள்.
இத்தனை உயிர்களை காவு கொண்டவரை
மெத்தையில் மேனிவருட சம்மதமாவதைவிட
சாக்காட்டில் போய் கட்டையிலேறி கரியாகிவிடலாம்
காலக்குரலெழுப்பாத எல்லாக்குரல்வளைகளை
அறுத்துவிடலாம்
பயந்தால் எம்பைங்கிளிகளுக்கு ஆபத்து நிச்சயம்
இன்று மலையாளபுரத்தில் நாளை நம்மண்முழுக்க
நம்மினம் கலந்துபோகும்
எம்மினம் அழிந்துபோகும்.
எம் பெடியனாருவன் ஒரு பெட்டையின் பின்னால்
போனாலே கொடுக்குக்கட்டிக்கொண்டு
கோடு வழக்கென்று இன்றும் போகிற
எம்பண்பாடிகள்
எம்முடக்கில் நின்ற மூதேவியொன்று
வீட்டுக்குள்வந்து மருமகனாகிறபோது
ஒரு முனகல்கூட இல்லாமல் இருக்கிறார்கள.;
இசைப்பிரயாக்களை ஏப்பம்விட்டவர்க்கு
எம் வீட்டில் என்ன விருந்து
நச்சுப்பாம்புகளோடு நமக்கென்ன உறவு
எம் ஊர்பெடியளுக்கு என்ன
ஆண்மையில்லையா
அழகில்லையா
வலிமிகுந்த தோளில்லையா
பிறகெதற்கு சில குமரிகளுக்கு
சிங்கள இராணுவத்தோடு இஸ்டம்.
உங்கள் சோதரனை நிர்வாணமாக்கி
நிற்கவைத்து சுட்டவனுக்கு
நீ இன்பம் படைக்க நினைப்பது
எத்தனைகேடு
உன் அங்கங்களை அறுத்தெறிய வேண்டாமா
தங்கைகளே!
உங்கள் கொங்கைகளுக்கும் கூந்தலுக்கும்
தவமிருந்து கவிபடைத்து
காதலிக்கும் பரம்பரை நம்வாலிபர்கள்
எம் பெடியன்களை உயிரின் அடிவரை
காதலியுங்கள்.
அகன்றஅவன் தோள்களின் மீது சாய்ந்து
எம்மினத்தின் பூக்களை பரவுங்கள்.
சிங்கள இனத்தின் மீது எமக்கு கோபமில்லை
அங்கேயும் எம்மைபுரிந்து கொண்ட புனிதர்கள் இருக்கின்றார்கள்
கோபமெல்லாம் சிங்கள இராணுவத்தின் மீதே
காதலும் அன்பும் அவனுக்கிருந்திருந்தால்
முள்ளிவாய்க்காலில் எங்கள் முத்துக்களை
சிதைத்து சிரித்திருக்கமாட்டார்கள்.
மிருகங்களுக்கு எம்வாசலில் என்றும்
விருந்து கிடையாது.
எம் வேதனைக்கு காரணமான வெறியர்கள்
நீதி தேவதையின் முன் மண்டியிடுகிற நாளுக்காக
காத்திருக்கிறோம் நாம்.
காலம் கனிகிற நாட்களில்
நண்பர்களே!
இன நல்லிணக்கம் என்ற பெயரில்
தென்னிலங்கை விடுகிற
தேனிலங்கை நாடகத்தில் பலியாகிவிடாதீர்கள்.
மௌனம் கலையுங்கள்
தீமைகள் நிகழும்போது தீயாய் இருங்கள்.
காணாமல் போனவர்களை இன்றும்
தேடிக்கண்ணீராகும் எங்கள் உறவுகள் ஆயிரமாயிரம்
இளவயதில் களைஇழந்து கனவுகள் உடைந்து
காத்திருக்கு விதவைகள் ஆயிரம் ஆயிரம்
வேதனை நிரம்பிக்கிடக்கிறது நம் சமுகத்தில்
அன்னிய அசிங்கங்களுக்கு அனுமதிக்காதீர்கள்.
நாம் எண்ணிய நாட்களை நோக்கி போகிற போது
திண்ணியங்களை இழந்துவிடாதீர்கள்.