Wednesday, August 8, 2012

சிலிர்ப்பு


-பொன்காந்தன்



நித்தமும் உன்
நெடுஞ்சோலையை
நீ ரசித்தாய்
உனை மறந்தாய்
மொட்டுக்களை
அது மலரும் மென் கணங்களை
நீ அறிவாய்
முற்றமெலாம் நீ விதைத்த
செடி மலர்கள்
அவை
சட்டென கடக்கும்
வழி போக்கன் பார்வையில்
சிலிர்த்தன என்றுமிலாதவாறு......
வாடி விழும் வரை
காதலித்தன வழி போக்கனை

ஒ ! வழிபோக்கனே
நீ போய்கொண்டேயிரு