Wednesday, July 11, 2012

புதிய இதயத்தின் நாட்கள் ..........



பொன் காந்தன்



நிரம்பிய காதலுடன்
உன்னை சந்தித்த போதெல்லாம்
எல்லாம் மோட்சமடைந்தன
எல்லாம் விடுதலை பெற்று சென்றன .
எல்லாம் கரைந்து போன கணங்கள் அவை .
எல்லாம் கொடுத்துவிட்டு
ஏவல் அற்றும்
சேவகம் அற்றும்
மன்னனாய் இருத்தலான பேரின்பம் .

உன்னை நான்
சந்தித்தேன் என்பதும்
என்னை நீ
வேரோடும்
வானத்தோடும்
பறவைகளோடும்
புரிந்துகொண்டாய்  என்பதும்
கடைசி நாளுக்கு
முதல்நாள் நடந்த
முதல் நாளின் ஆச்சரியங்களில் ஒன்று .

மொழிகளற்ற உலகின்
முதல் எழுத்தாய் தொடங்கும்
இச் சந்திப்பு
எதை எழுத போகிறதோ
அது
புரிய இயலா கொந்தளிப்பாய்
நுரை தள்ளி கிடக்கும்
பிறவியின் இறுதி கணங்களில் .....

குருவிகளும் காற்றும்
பறவைகளும்  பார்வைகளும்
விளைவித்த கனியென
பரவும்
காதலின் புதிய முற்றத்தில்
உட்கார்ந்து இருக்கிறது
நமது சந்திப்பு புதிய உலகை அழைத்தபடி ...

கடவுள்கள் ஒருநாள்
மலர்களுக்கு செய்த
அர்ச்சனை தீர்த்தத்தை
அருந்திய பரவசம்
இடையில் கள்ளருந்தி போய்
இமைகளில் ஊரும்.
திருடிசெல்லப்பட்டிருக்கும்
எல்லா நெருடல்களும் முடிவில்