Monday, December 19, 2016

சிறுத்தைகள் பணிந்த ஒரே ஒரு சிங்கம்















கண்ணோடு நிற்கின்ற
காலத்தின் உருவம்
நீ மண் வந்து போனாலே
நிம்மதி பிறக்கும்
விண்ணேறிக் கடந்து
வேதங்கள் சொன்னீர்
கண்ணீரில் எமைவிட்டு
ஏனய்யா போனீர்
முன்னின்று நீர் நடத்தும்
முழக்கத்தில் எதிரே
தன்னிலை தளர்ந்து
தடுமாற்றம் இருக்கும்
சிறுத்தைகள் பணிந்த
ஒரே ஒரு சிங்கம்
தேசத்தில் குரல்
அன்ரன் பாலசிங்கம்
வருத்தங்கள் உனை தின்ன
வானேறி வந்தீர்
தம்பி கரம்பற்றி அழைக்க
பாசத்தில் கரைந்தீர்
வருகின்ற வஞ்சக
சூழ்ச்சியை சொன்னீர்
இனி வரமாட்டேன்
சொல்லாமல் நெடும்தூரம் ஆனீர்
பரணிக்கு வழி சொல்லி
பக்கத்தில் இருந்து
நீர் பட்ட இன்னல்கள்
ஒன்றல்ல கோடி
தரணிக்கு எங்களின்
முகமாயும் இருந்தீர்
தலைமகன் இதயக்
குரலாயும் ஆனீர்
மரணம் பலமுறை
ஒத்திகை பார்த்தது
மலரும் தேசத்தை
பார்த்திட உயிர்த்தீர்
விலகும் பனியென
விதி நொந்து நின்றோம்
விடியல் கானலாய்
விடைபெற்றுபோனீர்
பூமி ரேகையில்
சாத்திரம் பார்த்தீர்
புலர்வுக்கு வழியிட
பூதலம் அளந்தீர்
புலத்துக்கும் நிலத்துக்கும்
புலரியின் தூதரே
நிலைத்தது நின்புகழ்
நீள் துயில் கொள்வீர்
தமிழர் தந்திரம் மந்திரம்
அன்ரன் பாலசிங்கம்
தமிழர் ராஜதந்திரி என்பது
உம் மங்கா நிரந்தரம்
வெள்ளைச்சியடலொடு
வேப்பமரக்காற்று
வேண்டிய நினதுளம்
நிச்சயம்
இங்குதான் எங்கேனும்
இளைப்பாறித்தூங்கும்

இன்று ஈழக்கவியரசு கவிஞர்புதுவை அப்பாவின் பிறந்த நாள்














எனக்கு கவிதை பிச்சை இட்ட பெருமானாரை
எப்படி நான் வாழ்த்துவேன்
உலைக்களம் உருக்கொள்ளவேண்டிய காலத்தில்
நீ இல்லையோ என்ற கேள்வி
நெஞ்சை கொல்லும் கவிதையே
புதுவை எனக்கு மதுவை ஊற்றியவர்
அதற்குள் நாவண்ணன் நெருப்பை ஊற்றி
நீறு பூக்க வைத்தவர்
புதுவை தந்த விரல்கள்
எப்போதும் வெட்டியாய் இருப்பதாய் தெரியவில்லை
விரல் விட்டு எவர்எவருக்கோ ஆட்டிக்கொண்டே இருக்கிறது.
தமிழை
காங்கிரீட் கலவை ஆக்காதவர் நீர்
மாசிப்பனியெனவும்
மார்கழி தூறல் எனவும்
காப்பணிந்த மகளிர்
களமேகிய வழியின் முத்துப்பரல்கள் எனவும்
பள்ளம் திட்டியென நெளிந்த வன்னி தெருக்களின்
கலவி மயக்கமெனவும்
தன் தலைவனை சாலையோரப்பூவரசின்
பூவில் பிசைந்து
காலத்தில் தீட்டிய மகரந்த வருடலெனவும்
காட்டியவன்
உன் தமிழில் எனக்கும் ஒரு கவளம் ஊட்டியவன்
உன் கர்வத்தில் ஒன்றாய்
உன் முற்றத்துப்பந்தலோரத்தில்
என்னையும் பதியமிட்டாய்
உன் காலடியில் இருந்து
கனவுகளை எடுத்துவைத்தேன்
வாங்கிப்பார்த்து
வகிடெடுத்து தலைசீவி
சிற்ப நுணக்கங்கள் பார்த்து
ஆங்காங்கு தொங்கிய குஞ்சங்களை அறுத்தெறிந்து
நெற்றியில் ஒரு பொட்டுவைத்து
உனக்கேயுரிய நக்கல் நளினங்களுடன்
என்னையும் பார்த்து
நீரும் வெளிக்கிட்டீரோவென
சிலாவி
கருணாகரனை அழைத்து
இதை வெளிச்சத்தில் இடுவென உரைத்த
தொண்ணூறுகளை மீண்டும் தொட்டு வணங்குகிறேன்
வாழ்ந்து முடிக்க வேண்டியிருக்கிறது
உங்களோடிருந்த
ஈரமும் எரிமலையுமான நினைவுகளுக்குள்
காலப்பாதையில்
கழிவு வாய்க்கால்களுக்கும் நடந்து
கடக்கவேண்டிய இத்தருணத்தில்
சாக்கடைப்புளுக்களின் படங்களையும்
இடைச்செருகி இடைஞ்சல்படுகிற இடர்பாடு
வெடியும் மருந்துமான வெள்ளையுள்ளங்களோடு
கவிதை வேள்வி செய்தாய் நீ
நானோ நடிகர் திலகங்களுக்கு மத்தியில்
அடிக்கடி என் மீதும் ஒட்டிக்கொள்கின்ற
அரிதாரங்களை தட்டி ஊதி தடுமாறுகிறபோது
உன் பாதிக்கவிதைதான் வருகின்றது
மீதி ஒரு விசரனின் விடியலுக்கான விஸ்வரூபமாகின்றது
நல்ல வேளை நீ இல்லை என் பிதாவே
இருந்திருந்தால்
நீ அன்று உலைக்களத்தில்
தம்பி விம்மி அழுகிறாள் ஈழத்தாய்
இன்றுன் வேலைகளை ஒதுக்கி
வெளிக்கிட்டுவா
விடுதலைத்தேரின் வடத்தில்
நீயும் ஓர் இடம்பிடி நாளைக்காயென்று
நாரி வலிக்க எழுதி அழைத்தபோது
ஊருக்குள் சேலைக்குள் ஒளித்திருந்த
செட்டியார்கள் எல்லாம்
இன்றுனக்கு பொற்கிழியும் பொன்னாடையும் அளிக்க
இதயம் கருகியிருக்கும் உனக்கு
தப்பிவிட்டாய் கவித்தலைமகனே!
வாழ்க நின் புகழ்

நான் யாரிடமும் பேசவில்லை!












மரணங்களுக்கும் மரணங்களுக்குமான உரையாடல்
தொடரும் விநாடியில்
உயிர்கசியும் ஏக்கத்துக்கும் உயிர்கசியும் ஏக்கத்துக்குமான சந்திப்பு
சிதறுண்ட குழந்தைகளின்
பிஞ்சு விரல்களுக்கும் பிஞ்சுவிரல்களுக்குமான கைகுலுக்கல்
தான்யாவின் குடும்பத்தில்
தான்யாவைத்தவிர எல்லோரும் மடிந்துவிட்டார்கள்
இறுதிச் செய்தி ஸ்ரலின்கிராட்டில் இருந்து முள்ளிவாய்க்காலிற்கு
முள்ளிவாய்க்காலில் இருந்து அலப்போவிற்கு....
முன்னெப்போதும் அறியப்படாத முள்ளிவாய்க்கால்
முன்னேப்போதும் அறியப்படாத அலப்போ
உலகின் சக மனிதர்களுக்கு
ரத்தஆற்றாலும் உயிர்கள் கொட்டுண்ட நிலத்தாலுமே
அறியப்படுத்துவதில்
மிக்க மகிழ்ச்சி உடையவர்களே
உங்கள் முகங்களினால் ஆன இந்த உலகத்தில்
ஒரு குழந்தையின் ஒரு நூற்றாண்டு கால மூச்சை
பனிமலைகள் இடையேயும்
பாலைவனங்களிடையேயும்
நதிக்கரைகளிலும்
கைகோர்த்து இடைதழுவி அணைத்து
ஓடித்திரிந்து ஒட்டிவைக்கும் காதல் இதயங்களை
பூமியை குளிர்விக்கும் மாயவிரல்களை
இதுவரை பார்த்திராத
ஆச்சர்ய கோல்களை உதைக்கப்போகும் பாதங்களை
உங்கள் பிள்ளைகளின் பிரியமான நண்பர்களை
நீங்கள் உங்களுக்கு பிடித்த கட்டளைகளால் கொன்றுவிட்டீர்கள்
வாழ்கிறவர்களுக்காக வணங்கப்படுகின்ற கடவுள் போல்
இறந்தவர்களுக்காக வரும் கடவுள்
இரக்கமுள்ளவனாக இரக்கமாட்டான்
மரங்களும் கட்டிடங்களும் மின் ஒளிச்சாரல்களும் நிறைந்து
நந்திக்கடலோரத்தில் ரம்மியமாக மாறியிருக்கும் இயற்கை
எதுவும் நடவாததுபோல
முளைத்திருக்கும் காட்சிகள்
அலப்போவிலும் நடந்தேறும்.....
அலப்போ என பெரிய எழுத்தில் கரும்பச்சை நிறத்தில்
ஒரு வரவேற்பு பலகையை நட்டுவையுங்கள்
எப்போதாது நான் வரும்போது
ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறேன்
கைப்பற்றப்பட்டவை
வெற்றிக்கொள்ளப்பட்டவை
எல்லாவற்றையும் அலப்போ வரும் வழியில்
எங்காவது காட்சிக்கு வையுங்கள்
மனதாபிமானத்துக்கான யுத்தத்தை விளக்கமளியுங்கள்
ஏன்சாகுறோம்
எதற்கு சாகிறோம்
எதனால் சாகிறோம்
என்று தெரியாமலே
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள்
எத்தனை இலட்சம் உயிர்கள்!!
எல்லோரும் ஒரே மாதிரியே இருக்கிறார்கள்
அலேப்போ பற்றி யாரிடமும் நான் பேசவில்லை!!!

வெரிகுட் !

நெற்றியில் சரிந்துவிழும்
முடிகளை கோதிவிட்டு கோதிவிட்டு
சின்னவயசில்
கூட்டவும் கழிக்கவும்
மனசுக்குள் வைத்து தொடங்கி
பத்துக்கும் பத்தெடுக்கவைத்து
ரீச்சரிடம்
வெரி குட் வாங்கித்தந்த விரல்கள்
இப்போதும்
தலைகோதிவிடும் பழக்கமுடைய எனக்கு
நரைகளின் கணக்கை சொல்லாமல்
எப்பொழுதும் பிழை விடுகின்றன
வெரிகுட் !

Saturday, November 19, 2016

தூவான விரல்களால் மீசை முறுக்கும் கார்த்திகை!!



















முற்றத்திலே முகம்புதைத்திருக்கும் மழையை
கொஞ்சம் வருடிவிடுகின்றேன்
முந்தாமல் பிந்தாமல்
இம்முறை நெருக்கமாய்
அற்புத நடனமாடி என்னை ஆசுவாசப்படுத்துகின்றது
முன்னைப்போல
கொடுப்பதற்கு ஒன்றுமில்லை
மழைக்கும் தெரியும்
பாரிநிலம் பாழடைந்து போகிறது
சுப்பர் மூனை பிடித்தேன்
கைகுலுக்கி அனுப்பிவைத்தேன்
மழையே நீ அப்படி அல்ல
என் ஆழ் மனதறிந்த தேவதை
என் மயிர்க்கால்களை தொட்டு
செல்லமே என்று தீண்டும் உரிமை நீ
என் பதிகங்களுக்கு அடியெடுத்துக்கொடுக்க
எந்தக்கடவுளும் வருவதில்லை
பித்தா என்று தடுத்தாட்கொண்டதுமில்லை
மழைதான் என் கதவு தட்டி
தூவான விரல்களால்
என் மீசையை கொஞ்சம் முறுக்கி
மார்பு மயிரை கோதி
மனசோடி பேசி
இதய வீணையை வாசி என்று
மின்னல் கொடி நாட்டி
என் யன்னல் ஓரத்திலும் நின்று
பாசுரத்தின் மூலவேர்வரை குழைந்து
ஒரு யாக மயக்கத்தில் இருக்கச்செய்வது.

தாயின் கொடியை கோவணத்திலும்
செருகமுடியாத துரதிஸ்டம்
தீபாவளி சிறுவனின் சீறுவாணம்போல்
சீசனாகவும் பாசனாகவும் மாறுகிறது
மண்ணுள் விதைந்தவரின் நினைவு
வேட்டிக்கரையும்
சிவப்பு மஞ்சளாய் வரும்
ஐயப்பா சாமிகள் போல்
அதையும் உடுத்துத்திரிவார்கள்
கனவுகளின் கதை தெரியாமல்
சில காலத்தில் வெருளிகளும் அதை உடுக்கும்
மஞ்சள் சிவப்பு சாயத்தை
பரஸ்பரம் ஊத்தி
பன்றிகள் போல் உருண்டு
இதுவும் ஒரு பண்டிகை ஆகும்
தன்னை தமிழென்றே அடையாளம் செய்யாமல்
தன் பேரும் பெருமைகளும் யாருக்குத் தெரியாமல்
எங்கள் ஊருக்குள் உலவி
வேருக்கு மட்டுமே தெரிந்த
வெற்றித்திலகங்களின் முன் எம்மாத்திரம் நாம்
ஆறுவருடங்களில் பிணங்களை விற்று
காலப்பழி தாங்கும் வெட்டியான்கள் நாம்
விசஊசி கண்டு பிடித்த பெரும் விஞ்ஞானிகள் ஆனோம்
யார் அடுத்த பிரபாகரன் போட்டிவைத்தோம்
சண்டை என்றாலே
இடுப்பின் கீழ் ஈரமாகிய ஒருவர்
சாவொரு புறம் நடக்க
பென்சன்தரும் உத்தியோகமும்
புறமோசன்களும் தேடிய வேறுசிலர்
மாண்புமிகு கௌரவங்களே
எப்போவதாவது மணலாற்றின் காட்டின்
பூவாசத்தை சுவாசித்திருக்கிறீரா
மண்கிண்டியில் வீழ்ந்த பெண் பிள்ளைகளின்
ஈகம் பற்றி ஏதும் தெரியுமா
இந்தா பிடி என்று உங்கள் பிள்ளைகளை
விடுதலைக்காய் ஈந்திருக்கிறீர்களா
ஒரு மக்கள் போராட்டம்
மண்ணில் புதைந்திருந்தால்
மானத்தோடிருக்கலாம்
அப்படி நடக்கவில்லையே
பாதிப்பேர் சாதி பார்த்துக்கொண்டும்
தொடர்களுக்கு இழித்துக்கொண்டும்
நாட்டில் பிரச்சனை என்று
வீடுகளை பாழடைய விட்டுவிட்டு
வேறு தேசங்களுக்கு விசா எடுத்துக்கொண்டும்
மட்டக்களப்பு ஏழைகளின் பிள்ளைகள்
கனகராயன் ஆற்றோரத்திலும்
மாங்குளம் பெருங்காட்டுக்குள்ளும்
ஆடை மாற்றாமல் அரைவயிறோடு போராட
காற்றுவாங்கிக்கொண்டும்
காலங்களித்து விட்டு
வா விடுதலையே என்றால் எப்படி வரும்

தயவு செய்து முதலில்
பிரபாகரனையும் மாவீரர்களையும்
நாம் விடுதலை செய்யவேண்டும்
அழுக்குப்படிந்த நெஞ்சங்களோடு
புனிதர்களை
எங்கள் போகங்களுக்கு பயன்படுத்தல் அசிங்கம்
விட்ட இடத்தில் இருந்து எழுதத் தெரியாதவர்கள் நாம்
பிரபாகரன்போல
மேடையில் மிமிக்ரி செய்வதல்ல
அடுத்தகட்ட விடுதலைப்போராட்டம்
முடிந்தால் சுதுமலையில் இருந்து
இறுதிவரை விடப்பட்ட அறிக்கைகளை
வாசித்து யோசியுங்கள்
யூதர்கள் எரித்திரியா வியட்நாம்
இப்படி ஏகப்பட்ட மேற்கோள்களோடு
மேடைப்பிரசங்கம் செய்கிறவர்களுக்கு
முதல் எல்லைப்படை மாவீர்ர்
அப்பனின் வரலாறு தெரியாது
மயில்குஞ்சனின் வல்லமை தெரியாது
நான்கு மறவர்களை மண்ணுக்காய் ஈந்துவிட்டு
இம்மாரியில் குடிசையில் நனையும்
உன்னத தாயை தெரியாது
ஒற்றைக்கண்ணும் ஒற்றைக்கையும்
விடுதலைக்காய் கொடுத்துவிட்டு
இற்றைக்கு முதிர் கன்னியாய் இருக்கும்
தோழிக்கு ஒரு மண வாழ்க்கை கொடுக்க
உள்ளுரிலும் வெளியூரிலும் ஒரு தமிழன் இல்லை
வெள்ளைக்காரிக்கு கணவராக தயார்
ஆனால் அன்ரன் பாலசிங்கம் ஆக தயாரில்லை
மண்ணுக்காய் வீழ்ந்த
என் அண்ணன்கள் இருந்திருந்தால்
இப்படி இருப்பேனா நான் என ஏங்கும்
ஒரு தங்கையை எத்தனைபேர் ஸ்பொன்சர் செய்வீர்கள்

மஞ்சள் சிவப்பு துணி மாவீரர்  பிரபாகரன்
ஆறுவருடம் ஓட்டியாச்சு இனி என்ன
மாவீர்ர் துயிலுமில்ல காணிகள் விட்டாயிற்று இனி என்ன
அரசியல் யாப்புக்கு ஆலோசனைகளும் சொல்லியாயிற்று இனி என்ன
வடக்கு மாகாண சபையின் சாவியை
ஆளாளுக்கு இடுப்பில் செருகினோம் இனி என்ன
அபிவிருத்தி குழு தலைவர் பதவிகள் பெற்றோம்
ஆடர்கள் போட்டோம் இனி என்ன
எல்லாம் கொடுப்போம் விடுதலைக்கு என்று
மாவீரர் விதைகுழியில் சத்தியம் செய்துவிட்டு
என் மயிருக்கு பூண் இல்லை என்று புலம்புகின்றோம் இனி என்ன
இந்த புண்ணிய நாட்களில்
என்னைநோக்கியே ஆயிரம் கேள்விகளை கேட்கிறேன்

மறவர்களின் காலடியில் இருந்து
இரவிரவாய் கவியெழுதி
விடிந்தபொழுதில் வண்டுகள் அளையா மலராய்
மாவீரர் நாமங்களில் சூட்டியவன் நான்
எனக்கு வருத்தம் இருக்காதா என்ன
திரும்பிவருவோமா இல்லையா என்று
இறுதி வார்த்தைகளை எழுதித்தந்துவிட்டு
வாசியுங்கள் காற்றில் கலக்கட்டும் என
களத்தில் வீழ்ந்த
தம்பி தங்கைகளை நினைத்தால்
என் நெஞ்சுவெடிக்காதா என்ன
விம்மாதா என் மனம்
விழியுடைந்து பாயாதா கண்ணீர்
மண்ணை மறந்து
இன்று இரவானால் தண்ணியில் மிதக்கின்ற
தம்பிகளை அழைத்து
அறிவுரை சொல்லி எண்ணிப்பார்
உன்னைப்போல்
அந்த உத்தமர்களும் வாழ்ந்திருக்கலாம்
கண்ணை விழி மகனே
கனவுகளை சும என
சொல்லத்தோன்றாதா எனக்கு
அங்கயற்கண்ணி என்ற ஏழை மகள்
என் இளவரசி
பள்ளிபோகாமல் பலமைல் கடல்நீந்தி
எண்ணியது முடித்துக்கரைந்த
நினைவுகள் அலையாய் உரசும்
பண்ணைக்கடலோரம்
படிக்கவென்று புறப்பட்டு
சோடிகளாய் குடையின்கீழ் குலவும்
இன்றைய இழிநிலையில் இறந்துவிடுகின்றது ஈகங்கள்

குறைந்;தது தமிழராய் இருக்கவும்
இன்னும் சிலகாலத்தில் கடினமாய் தோன்றும்
தமிழை உச்சரிப்பதும் சிலருக்கு வெட்கமாய் தோன்றும்
முள்ளிவாய்க்கால் நினைவும்
முன்பு நடத்தப்பட்ட படுகொலை நினைவுகளும் புனிதமற்று
செலிபிறேசனாகவும் செல்பி படங்களாகவும் மாறும்
அன்னியர் இன்னும் எங்களை
ஆங்காங்கு வைத்து அழகுபார்ப்பதற்கே விரும்புகின்றான்
நாம் கட்டிப்புரண்டு காறி உமிழ்வதே
உள்ளுர எதிரிகளின் எதிர்பார்ப்பு
எண்பதில் இருந்து இதையே நாமும் செய்கிறோம்
எப்பிடி விடுதலை சாத்தியம்
எமக்குள்ளும் எதிர்கட்சிகள் அதற்குள்ளும் குழுக்கள்
ஆளும் கட்சிக்குள்ளும் எதிர்கட்சிகள்
இந்த அரியவகை அரசியல் சித்தாந்தை
இனத்தை இழிவுபடுத்தி உருவாக்கிய கீர்த்தி எமக்கே
ஒரு கக்கூசை கட்டுவதற்கு கூட
கயிறிழுத்தல் போட்டி
ஆயிரம் ஆய்வுக்கட்டுரைகள்
ஒரு கொடியை ஏற்றுவது எக்காலம்
மனசெல்லாம் புண்கள் வலிக்கிறது
சிலுவையில் இருக்கிறவனை
ஆளாளுக்கு வந்து ஆணி அடிப்பதுபோல் இருக்கிறது
அன்னியனை நரி என்றோம்
ஏன் அவதானமாக இருக்கத்தெரியவில்லை
அன்றி எங்களுக்குள் ஒரு நரியை வளர்த்தெடுத்து
அடிவேரோடு சரிக்கும்படியான வித்தைகளோடு
அவன் பக்கம் ஏன் அனுப்பத்தெரியவில்லை
குள்ளப்புத்தியோடு வாழ்தல் சுபம் என்பதாலா

உங்கள் தீக்குச்சிகள் இளவாளித்துவிட்டதை
இன்னும் ஏன் உணரவில்லை
இப்போதும் பலபேருக்கு
தூரத்தில் வெடிச்சத்தம் கேட்கவும்
இழுத்துப்போர்த்திக்கொண்டு படுக்கவும்
விடிந்தவுடன் கடவாய் துடைக்காமல்
சந்தியில் பேப்பர் வாங்கி
காவலரண் தகர்ப்பை எட்டாம்ப்பக்கம்வரை
பூஞ்சிப்பூஞ்சிப்பார்த்து புளுகித்தள்ளி
தங்கள் வீட்டில் வலியின்றி வாழத்தான் விருப்பம்
அடுத்தவர் பிள்ளைகள் வீழ்வதிலும்
அதன் சூட்டில் வாழ்வதிலும் இன்றுவரை
இழிபிறவி ஆசைபலருக்கு
வேடுவன் ஒருவன் எம்மை
குலம்கோத்திரம் சொல்லி
தூசணத்தால் தூற்றுகிறான்
வேலிதாண்டாமல் அகிம்சையின் இருப்பிடமாய்
கைகட்டி நின்றோமே ஏன்
இன்றல்ல பிழை வரும் வழிகளெல்லாம்
நாம் விட்ட தவறுகளுக்கு
அறுவடைகளை அறுத்துக்கொண்டிருக்கின்றோம்.
செவ்விரத்தையை செவ்வந்தியை துளிசியைகூட
சந்தேகப்படவேண்டியிருக்கின்றது
இரவு அவை பரிகள் நரிகளானதுபோல்
கஞ்சாவாய் மாறிவிட்டால்
மாணிக்கவாசகர் நிலை என்ன
மக்காள்
எஞ்சியிருக்கும் ஈழத்தமிழினத்தை
எப்பிடி சிதைவில் இருந்து மீட்கலாம்
சிந்தியும்
அதுவே உத்தமர்களுக்கு செய்யும் உன்னத கடமை
சள்ளை விழுமென
பிள்ளைபெறாமல் இருக்காதீர்கள்
ஈன்றெடுங்கள் இமயங்களை
வன்னிமகன் என்றும் வான்விழி என்றும்
நல்லினி என்றும் நாமகள் என்றும்
மலரவன் என்றும் மனுநீதி என்றும்
மனதுவிரும்ப பெயரிடுங்கள்
பெயர்களே அவர்களை பிழைவிடாது நடக்கவைக்கும்
இனமானத்தை பட்டவர்த்தன உண்மையாய்
முப்படைகளோடு காட்டிய நீங்கள்
இரவுபகலாய் இதிகாசபுரட்டுக்களை
தொலைக்காட்சிகளில் காட்டி
எங்கள் இனிய சந்ததியை
குரங்கு வரம்தரும் என பொய்மைக்குள் புதைக்காதீர்கள்
குறத்திதான் மறத்தீயாய் இருந்தாள்
அவள்தான் எங்கள் மூதாதை
அரியாத்தைதான் ஆனையை அடக்கியவள்
அவள்தான் எங்கள் றோல்மொடல்
ஒரு தமிழ்மன்னனின் மனைவியாய்
மதிவதனி என்பவள் இருந்தாள் என்பதை
சொல்லிவையுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு
பண்டாரவன்னியனின்  படை தளகர்த்தன்
குமாசிங்க முதலியார்
வெள்ளைகளால் தூக்கிலிடப்பட்ட
வட்டுவாகல்மரமிருந்த நிலத்தில்
கரிகாலன் என்ற மன்னன்
ஈராயிரத்து ஒன்பதில் தன் குடும்பத்தையே
மண்ணுக்காய் கொடுத்தான் என்பதை
குறித்துவிடுங்கள் பிள்ளைகளின் நெஞ்சில்
நினைவுகளை அட்சரம் பிசகாமல்
அடுத்த சந்ததிக்கு கடத்துகின்ற கடமையை
இந்த புனித கார்த்திகை தருகின்றது பூசியுங்கள்!
































Thursday, September 15, 2016



வேதனையுடன் பொன்.காந்தன் ஈழத்தில் இருந்து ......








தம்பி விக்னேஸ் நீ போய்விட்டாயாம்
நீதான் நெருப்பு
அதை அறிவிக்க வேறு பலவழிகள் இருந்தன
நீ இறந்து போனது முட்டாள் தனம்
நீ என் தம்பி என்பதற்காக
உன் முடிவை ஆமோதிக்க முடியாது
நீ நெருப்பு
நீ இருந்திருக்க வேண்டியவன்
இறந்திருக்க வேண்டியவன் அல்ல
நீ கட்சியின் தொண்டன் அல்ல
நீ தமிழர்களின் தொண்டன்
நீ இருந்திருக்கவேண்டியவன்
நீ உண்மையானவன்
நீ இறந்திருக்க வேண்டியவன் அல்ல
பால்வடியும் உன் முகத்திற்கு
நான் தலைசாய்க்கின்றேன் வணங்குகின்றேன்
நீ போயிருக்கக்கூடாது
உனக்கென இன்னும் கடமைகள் இருந்தது
நீ பொறுமை காத்திருக்கவேண்டும்
நான் காவிரிக்காக இரங்கவில்லை
அது சித்து விளையாட்டு
உனக்காக கலங்குகின்றேன்
அடுத்த சூப்பர் ஸ்ரார் யாரென்று
வாக்கெடுப்பு நடத்துகின்ற இளைஞர்கள் மத்தியில்
உன்னுயிர் எத்தனை மாபெரிது தெரியுமா
சானல்களுக்கும்
அங்கு தெரிகிற சதைகளின் இடைவெளிகளுக்குள்ளும்
சதா தொலைகின்ற இன்றைய
இளைய தலைமுறைகள் மத்தியில்
நீ மாபெரும் கோபுரம் என்பதை ஏன் அறிந்திருக்காது விட்டாய்
நீ உன் இறுதி வார்த்தைகளை
கடித வடிவில் எழுதிக்கொண்டிருந்த
அந்தக் கணத்திலும்
நீ தீயில் கருகிக் கொண்டிருந்த
அந்தக்கணத்திலும்
நீ உயிருக்காக போராடிக்கொண்டிருந்த
அந்தக்கணத்திலும்
உன் கடைசி மூச்சு காற்றில்
அந்தக்கணத்திலும்
தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாட்டிலும்
ஏன் நீ நே
சித்த ஈழத்திலும் கூட
தொலைக்காட்சித் தொடர்களையும்
நட்சத்திர களியாட்டங்களையும்
ஒரு கூட்டம் பார்த்துக்கொண்டிருந்தது
அந்த கூட்டத்தின் பெயரும் தமிழர்கள்தான்
அறிவாயா தம்பி
இன்றில்லை எனில் நாளை நாம் வெல்வோம்
அதற்காய் நீ வேண்டும்
யாருக்காகவோ
உனது பெருமைமிக்க உயிரை
நாம் தொலைத்துவிட்டோம் என்றே எண்ணுகின்றோம்.
அன்னியனை அடக்குவதும் வெல்வதும் வெகுசுலபம்
அதற்கு நல்ல தலைமை வேண்டும்
எத்தனை பேர் தமிழர்களுக்கு தலைமை தாங்குகிறார்கள்
நீ எண்ணிப்பார்த்திருந்தால்
உன் உயிர் வீணாகவே போகும் என்பதை உணர்ந்திருப்பாய் தம்பி
ஏன் நீ கூட உலகத்தமிழர்களின்
தன்னிகரற்ற தலைவனாய் இருந்திருக்கலாம்
நான் நினைக்கிறேன்
தன்னிகரற்ற எங்கள் நாளைய தலைவன்
பிரிந்துவிட்டான் என்றே!

Monday, September 12, 2016

பொன்.காந்தன் : நந்திக்கடலுக்கான பாதை

பொன்.காந்தன் : நந்திக்கடலுக்கான பாதை: நந்திக்கடலுக்கான பாதையில் புதைந்து போன குழந்தைகளின் ஒலிகள் சதை கிழிந்து தலை சிதறி கதை முடிந்த அன்னையர்களின் ஒலிகள் எனக்கு இப்போ...

பெருமூச்சு




முதலில் கொல்லாதே
என்னை கொல்லாதே
பிறகு குத்தாதே குத்தாதே
அடுத்து
அப்பனை நம்பாத
செத்தான் செத்தான்
தகரங்கள் போத்தில் கண்ணாடிகள்
தாறுமாறாய்
உடைந்து விழும் சத்தம்


பதறி எழும்பி
பக்கத்து வீட்டுக்காரரையும்
தட்டி எழுப்பி
தாழ்வாரத்தில் கிடந்த
தடி இரண்டெடுத்து
கொடுக்கு கட்டி
கூக்குரல்
சண்டை குழறல்
சத்தம் வந்த பக்கம் ஓடினேன்
ஒரு நாலைந்து முற்றத்தில்
நாரி முறித்தாட
ஊரிப்பட்டது கைதட்ட
நிண்டு பார்த்தேன்
ஒண்டுமில்லை
இண்டைய சினிமா பாட்டுத்தான்
என்னை எழுப்பி
இவ்வளவிளைக்க ஓட வைச்சிருக்கு
மண்டை குழம்பி ஒண்டும்பேசாமல்
இல்லம் திரும்பினேன்
எங்கேயோ மெல்லிதாய்
தேன் கிண்ணத்தில்
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
பூவாடை வீசி வர பூத்த பருவமா
காற்றில் கலந்து கொண்டிருந்தது
எல்லாத்துக்குமாய் சேர்த்து
என்னிலிருந்து ஒரு பெரு மூச்சு

பக்தி



மாம்பழத்துக்கு மல்லுக்கட்டினாய்
முன் கோபம் உனக்கு
சுள் என்று மூக்கில்
கோபித்தாய்
மயிலேறிப் பறந்தாய்
மானஸ்த்தான் நீ
புலுடாக்கள் உனக்கு பிடிக்காது
உலகை சுற்றிக் காட்டினாய்
ஓர்மத்தொடு
கோவணாண்டியாய்
கிழவிக்கு தோன்றினாய்
பாடப்பெற்றாய்
பரவசமாயிருந்தது
இயல்பான குணங்களுடன்
உன் இயற்கை
எல்லோருக்கும் பிடித்திருந்தது.
முதலாம் புலிகேசி நீ
சுட்டபழம் சுடாத பழம் தந்த
முதலாம் வடிவேலு
இடைக்கிடை யார் துன்புற்றழைத்தாலும்
தலைமை தாங்கி தளபதியாகி
களமாடுவாய் தோழர் சே போல
அதுவரை எல்லாம் நலம்
உன்னை நம்பினேன்
நேற்றோ
உன் திருமுகத்தை
கையேந்திகளின் தேசத்தில்
பட்டுப் பீதாம்பரத்துள்ளும்
கொட்டிக் கிடந்த
தங்க நகை சாத்துப்படிக்குள்ளும்
தேடிக் கண்டு பிடிக்க பட்டபாட்டில்
ஒரு பணக்கார கந்தசாமி
பாடப்பெற்றான்

விலகி வழி விட்டேன்
வர்ணங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன
நதிகள் இரண்டு பாய்ந்துகொண்டிருந்தன
பறவைகள்
கூட்டம் கூட்டமாய்
எங்கிருந்தன!!
அருகே ஆயிரம் நிலவுகள் உரசிக்கொண்டு
இங்கேயுமா வானம்!!
இன்னும் விலகி ஓரமாய் நின்றேன்
இன்னதென்று உரைக்கமுடியா
அழகிய பட்சியொன்று
அதன் இனிய பாடலில்
நானுமிருந்தேன்..
அன்பே
இரவு திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்
என்
இதயத்துக்குள் இருக்கும் உன்னை
ஒரு வெள்ளை வான்
கடத்த வந்தது போல் ஒரு கனவு
நீ வந்து விட்டது போல் நிஐம் எப்போது!

குசினிக்குள் போனேன்
அடுப்புக்குள் படுத்திருந்த பூனை
அன்ரனா வழியேறி
அப்பால் ஓடியது
கொடுப்புக்குள் சிரிப்பெனக்கு

சந்திப்பு +காலம்




அவர் நீண்ட காலத்திற்கு பின்
என்னை சந்தித்தார்
கனகாலம் நலமா என்றார்
நலம் என்றேன்
காந்தன் எப்பிடியிருக்கிறான் என்றார்
அதிர்ந்து போனேன்
அது நான்தான் என்பதற்கிடையில்
பழைய மாதிரி
இப்பவும் அவன் குழப்படியா என்றார்
இல்லை இல்லை
இப்ப குறைவு என்றேன்
அரசியல் தேசியம் எண்டு
ஏதோ கத்துறான் என்றார்
எப்பவும் அதுதான் என்றேன்
கவிதையெண்டும் ஏதோ
இடைக்கிடை எழுதுறான் என்றேன்
உந்த விசர்க்குணம்
படிக்கிற காலத்திலேயே
அவனுக்கு இருந்தது என்றார்
கடுமையாக கோபம் வருமே
அவனுக்கு என்றார்
இல்லை இப்ப கொஞ்சம் சாந்தம் என்றேன்.
அப்ப அவன் சூப்பி ரவி
எங்கே என்றேன்
ஆர்.....ஹாஹா
நான் தான் அது என்றார் அவர்

நந்திக்கடலுக்கான பாதை




நந்திக்கடலுக்கான பாதையில்
புதைந்து போன குழந்தைகளின் ஒலிகள்

சதை கிழிந்து தலை சிதறி
கதை முடிந்த
அன்னையர்களின் ஒலிகள்
எனக்கு இப்போதுவரை கேட்கிறது

நந்திக்கடலுக்கான பாதையில்
காயமுற்று
மருந்துகள் இன்றி வலி பட்டு
உயிர் போன உறவுகளின் ஓலம்
குடும்பமாய் எச்சமின்றி எரிந்துவிட்ட
சாம்பலில் எழுந்த
ஏக்கக் குரல்கள் எனக்கு இதுவரை கேட்கிறது.

நந்திக்கடலுக்கான பாதையில்
ஊரிழந்தவனின் கடைசி மூச்சின் ஒலி
அகதி ஒருவனின் ஆன மட்டுமான துயரம்
எனக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது

நந்திக்கடலுக்கான பாதையில்
இசைப்பிரியாவை இழுத்துச் செல்லும்
வேட்டை நாய்களின் கடிபாடு
இரைகண்ட குரைப்பு
கண்டல் நிலத்தில் விறாண்டிய நக ஒலி
ஒரு முயல் குட்டி
வெறி நாய்களை கடவுளாய் வரம் கேட்ட
வறண்ட கெஞ்சல்
எனக்கு இதுவரை கேட்கிறது

நந்தி கடலுக்கான பாதையில்
உன் திசைகளில் இருந்து
பாய்ந்த எறிகணைகளில்
உன் திசைகளில் இருந்து புறப்பட்ட
யுத்த விமானங்களில்
டாங்கிகள் கொட்டிய குண்டுகளில்
செவிப்பறை கிழிந்த
எனக்கு எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும்போது

வீரனே கமால்
உமக்கு மட்டும் நந்திக்கடலுக்கான பாதையில் ஏதும் கேட்க வில்லை

துட்ட கைமுனுவின் கனவாக
சிங்கபாகுவின் வாளாக தீட்டப்பட்டு
எம்மிடம் அனுப்பப்பட்ட உங்களிடம்
தட்டு நிறைய சுமந்து செல்லும்
வெண் தாமரைகள் எந்த இரக்கத்தையும் அறிவித்திருக்கவில்லை

நந்திக்கடலுக்கான பாதை நோக்கிய
உனது நாட்களில்
உனது கிராமத்துக்கும்
உனது சுற்றங்களுக்கும்
காட்டுமிராண்டியாய்
அறிவிக்கப்பட்டிருந்த பிரபாகரனை
புனிதமாக்கும்
உன் நந்திக்கடலுக்கான பாதையில்
வெறி கொண்டிருந்த
ஆண்குறிகள் பேசாது என்றும்
மார்புகளில் விறாண்டிய நகங்கள்
எழுதாது என்றும்
யோனிகளை பிளக்கச் சொன்ன உனது
காற்றில் கலந்திருக்கும் சங்கேதங்கள்
மொழி பெயரா என்றும்
பொம்மைகளின் ஏக்கத்தோடு முடிந்த
குழ்ந்தைகளின்
மறு பிறவி உன் சந்ததிகளிடம் புகுந்து
அலைக்க
கட்டி வைக்கப்பட்ட
புனித யானைகளிடம் மதம் ஏற்றி
தெருக்களை துவம்சமாக்குமெனும்
அமானுஸ்யம் உண்மையில்லையென்றும்
நம்புகிற
உன் நந்திக்கடலுக்கான பாதை
உங்கள் படைகளால் பரிசளிக்கப்பட்ட
எமது எல்லா மரணங்களும்
நிகழ்ந்த வீடுகளிடையே
எதுவரை போகும்!

Sunday, August 28, 2016

பூமிப்பாடம்




வல்லையால் வருவானென
வாய்ச்சவடால் விட்டிருக்க
கொல்லையால்  வந்தான்
குடும்பியை அறுத்துச்சென்றான்
இல்லையேல் அவனை
இரண்டாய் பிளந்திருப்பேனென
வெறும் வாய் மெல்ல
மண்டையில் மயிர் கொட்டும்
மாறிச்சிந்தி
சண்டை  என வந்தால்
சட்டை கிழியத்தான் செய்யுமென்ற
இன்றைய தத்துவத்தையேனும்
நினைவில் கொள்
கொண்டை அறும்
குரல்வளை கிழியும்
மண்டையில் நாலோட்டை வரும்
மறைந்துபோய்
மறுவடிவம் எடுத்து
சூரனார் போல்
சூட்சுமம் காணவும் வேண்டும்

மன்னர் காலமா இது
கர்ணன் படத்தில்
கர்ச்சனை செய்து
கதாயுதமும் ஈட்டியும்
கொண்டு களமாட
மாறிச்சிந்தி
இன்றுபோய் போர்க்கு
நாளைவாவென சொல்ல
இதிகாசம் இயம்பும்
இழிச்சவாயர்கள் இன்றுண்டா
வண்டு வந்து பார்த்து
படமனுப்ப
ஒண்டுக்கிருப்பவனுக்கு இலக்குவைத்து
எறிகணை பாயும் காலம்
சொண்டுக்கு மட்டும்
குறிவைத்து சிவப்படிக்கும்
சினைப்பர் யுகம்

முன்னுக்கு நிண்டு
மூவாயிரம் யானை
நாலாயிரம் குதிரை
நாலாபக்கமும் தேர் நிறுத்தி
சங்கூதி சமர்புரிந்;த மூளை
கொஞ்சம் குந்தி இருந்து
மண்டையை கசக்கினதால்
பாட்டி காலம் முன்
ஏகே போட்டி செவின்
பீகே கைக்கு வந்தது
பிஸ்டல் கனோன் பிரசவமானது
ஆட்டி ஆமட் கார்
டசின் கணக்கில் ஓட்டும் மல்ரி
மிக் மிராஜ் டோறா மிதக்கும் டாங்கி
எல்லாம் நாடுகள் தூக்கி வைத்து
நானா நீயா நாண்டு பிடித்தன

நாமென்ன சும்மாவா
ஜொனி பசிலன் அருள்
தண்டவாளத்தில் ஊர்ந்து
எதிரியின் எல்லைநுழைந்து
ஏதோ ஏக்கம் கனவை விதைக்குமொன்று
சாரை நாகமென்று
புறப்படும்போதே
அன்னியரின் அடிவயிற்றை
கலக்கி இறைக்கும் இன்னொன்று
புளி பூவரசக்குள் ஒளித்து வைத்து
ஓடிப்போயெடுத்து
பொக்கணை இரணைமடுவில்
போயெழுப்பும் புட்பக விமானங்கள்
இப்படி எல்லாம்
வேறுவடிவில் வந்து
விலாவாரியாய் பார்த்து
மூக்கில் விரலை வைத்து
முழுசிக்கொண்ட உலகம்
இதுபோல எங்கள்
ஆயுத சந்தையில் புதிதாக இல்லை
புல்லரிக்கிறது
பூத்து காய்க்க முன்னர்
பிடிங்கி எறியவேணும் என்று
பார்த்து பார்த்திருந்து
எல்லை கடந்து
கொல்லையால் வந்து
அடியோடு சாய்த்து
ஒருவாறு முடித்தார்
சண்டையா பிடித்தார்
தந்திரங்கள் செய்தார்
தடவியும் கொடுத்தார்
பலவான்கள் அவர்
பசப்புக்கள் விட்டார்
பல வாறு நடித்தார்
எம் பாய்ச்சல் முடித்தார்
தடிமாடாய் தமிழர்
இலட்சம் பேரிருக்க
ஒரு சிலரே விடிவுக்கு
விதையாகிப் போனார்
இப்போதும் பலபேர்
வாய்ச்சவடால் விண்ணர்
வேறாரோ மண்ணுக்காய்
வீழ்ந்திடும்போது
கைதட்டி வாழும்
கடை நிலைப்பிறவி
இந்நிலை தொடர
இனிவரும் காலத்தில்
வல்லையால் வந்தே
வைத்திருக்கும் கோவணத்தை
இல்லை உனக்கேதுமில்லையென்று
எடுத்தவன் செல்வான்

Saturday, August 27, 2016

உணர்வு -பொன்.காந்தன்

PON.KAANTHAN .TNA

pon.kaanthan

PON.KAANTHAN

PON.KAANTHAN

tna meeting mulankaavil 30.07. 2015

pon. kaanthan TNA valaippaadu meeting

pon.kaanthan

vaddukoddayil irunthu mulli vaaikkaal varai -aivurai -pon.kanthan

அம்மா எங்கே!



நிலவுடுத்த நீள் விழி மங்கை
வீரத் தினவெடுத் தெழுந்து
தெருவிறங்கி தீட்சண்யம் கொண்டு
அரியாத்தை மரபுடுத்து மாண்புறு
மண் மீட்கப் பாய்ந்த நாளில்
எங்கள் கடல் வீரி
உடல் கரையக் கொண்ட உன்னதம்
அங்கயற்கண்ணி அறிவீர்
முன்னாளில்
அலை கரையில்
தோழியரொடுலவும் வேளை
உரைத்தனள் ஒரு சேதி
உள்ளிருந்த ஆதங்கம்
' ' நான் கட ல் மடியில் வெடித்து
காவியமாகும் நாள் நல்லூர் கந்தன்
திருவிழா நாளாய் இருப்பின் மிக்க மகிழ்ச்சி
அந்நாளில்தான் என் அம்மாவின் கையில்
அதிகம் காசு புழங்கும்
என் நினைவு நாளுக்கு
வீடு வரும் தோழியரை
நன்றாய் உபசரிப்பாள் அம்மா' ' என!
இப்போது நல்லூர் கந்தன் திருவிழா
நல்ல சனமாம்
கச்சான் விற்ற அங்கயற்கண்ணியின்
அன்னை எங்கே!

தைலம்



வீட்டு மூலைக்குள்
விளக்கு படாவிடத்தில்
மறைத்து வைத்து
குசினிக்குள் மாயும்
மனிசியை ஓரக்கண்ணால்
பார்த்தோடியோடி உறிஞ்சி
ஒன்றும் தெரியா பாவியாய்
விறாந்தையில் குந்தி
முட்டையிருக்கோப்பா
அஞ்சாறு வெங்காயம்
வெட்டி வதக்குவீரோ
என்று தொடங்கி
கதிரையிலிருந்தெழும்பையில்
கொஞ்சம் தளம்பி
அறுபது மைல் கடந்திருக்கும்
மனுசியின் அப்பரை இழுத்து விளம்பி
அடுப்படியில் அவள்
சட்டி பானையுடன் குழம்பி
புட்டையும் அருமாந்த
முட்டையையும் உள்ளேபோய்
மீண்டும் உறிஞ்சி வந்து
அரைகுறையில் சிலம்பி
விழுந்து படுக்கும் சிவக்கொழுந்து
எழுந்து எதுவும் தெரியா பாலனாய்
மற்றோர் நாள் மறைத்து வைத்ததை எடுத்து
உறிஞ்சுகையில்
கண்டுவிட்டான் கடைக்குட்டி
என்னப்பா எனக்கும் என்றான்
ஐயோ அது வேப்பெண்ணை தைலமென்றார்.
அம்மாவிடம் ஓடக்கடைக்குட்டி
அப்பாவுக்கு வருத்தம் என்றாள்
முட்டையை பொரித்தபடி !

வரமா! சாபமா!!



கள்ளுக்குள் மிதக்கும்
வண்டு மட்டைத்தேள்
குண்டுப் புளு கொடுக்கான்
கஞ்சல் கழிவு எல்லாம்
சுண்டிவிட்டு ஒரு சுருதியுடன்
மண்டிவரை மொண்டுகின்ற மயில்வாகனம்
பெண்டிலின்;முடியொன்று
சோத்தில்உதிர்ந்து இருக்க
குந்தியிருந்து குமட்ட வாந்தி
பந்தியிருந்து எழும்பி
பார்வையால் கறுவி
சந்திக்கடையில் சாப்பாடு கட்டி
முண்டிவிழுங்கி
முற்றத்திறங்கி பெருமூச்செறிந்து
அந்நாளிருந்து
இவள் சமையல் அசிங்கமென்று
அபாண்டங்கள் சுமத்தி
ஆறுகின்ற சண்டாளா!
கண்டி வீதியில்
கடுகதி வசுவொன்றில்
கன்னியிவளை கண்டேன்
கால்வரை கருங்கூந்தல்
என்று கண்செருகி
சுண்ணாகம் தூதனுப்பி
தம்பி தங்கமென்று
தரச்சான்று கொடுத்து
கைப்பிடித்த தேவதையின்
நாக சடையிருந்து ஒன்று
சோத்தில் விழுந்தால்
வரமா! சாபமா!!

தங்கம்

ஒலிம்பிக்கில் 
யார் யாருக்கோ தங்கம் வெள்ளி..
எல்லோரையும் பார்த்து
எனக்குள்ளே ஏகப்பட்ட மகிழ்ச்சி
எங்களூரில் திருவிழாவில் மணிக்கடைகளைபார்த்து
வீடு திரும்பும்
ஏழைச் சிறுவனைப் போ

பதில்



சந்தங்கள் தேடி
சாற்றிடத் தமிழில்
ஒன்றுக்கு நூறாய்
உள்ளத்தை பிழிந்து
என்றைக்கும் பாவினில்
இழைத்திடாதொரு
இனிமையை கொண்டு
பல்லக்கிலேற்றி
பாவையை மயக்க
சொல்லுக்கு சொல்
சோமபானம் தடவி
வில்லை வளைக்க
வில்லங்கப்படாமல்
எல்லைவரை சென்று
இதங்கள் சேர்த்து
ஆயிரம் காதல்
கதைகள் தொட்டு
ஆங்கு முத்து
எடுத்து கோர்த்து
அழகு மயிலை
சாட்சி வைத்து
அற்புதத்தேரில்
ஏறி நின்று
தீண்டி தேனை
மயக்குமென்று
தேவிரதியை
கலந்து பேசி
தெளிவாய் மன்மதன்
செவ்வை பார்த்து
நாடியவளை சென்று
நல்ல பதில் எதிர்பார்த்து
நறுக்காய் இதை
அனுப்பி விட
நங்கையவள் தந்த பதில்
லொல்
என் செவி பிடித்த
இன்றைய நாகரிகம்
கொஞ்சம் வேகம் போதாது
பஞ்சம் வரை பாடும் கவியே
இன்றவள் சாய்வது
பல்சர் கரிஷ்மா பாய்வதில்தான்!
ஓ! !

ஊடல்




கதவு திறந்து
அறைச்சாளரம்
யாவும் திறந்து
வா என்றேன்
வரவில்லை
ஆவி நோக
அடங்கா வெம்மையில்
நான் வாட
எங்கே நிக்கிறாய்
கூவி அழைத்தேன்
சாளரம் வழி தேடினேன்
வேலிப்பூவரசின்
காய்ந்த இலை தடவி
கருகி விழுந்த புல் தடவி
முகத்தை சுழித்தபடி
மெல்லச் சாளரத்தால்
வந்தறையில் குந்திற்று காற்று
கடுகடுப்போடு
கதையை தொடக்கினேன்
என்னை உனக்கு தெரியாதோ
அழைத்தபோது
ஏன் அசுமாத்தமில்லை
காலி முகத்திலும்
கசூரினாவிலும்
காக்கை தீவிலும்
சாமரம் வீசும் உனக்கு
என் இளைப்பு எரிச்சல்
எப்படிப் புரியும்
வயல் ஒழுங்கைகளில்
தினம் சந்திக்கும் சோடிகளுக்கு
நீ தான் இதம் கொடுத்து
இனிப்பு ஊட்டுகிறாயாம்
காதல் கடிதமொன்றில்
உன்னையும் பற்றி
ஓரிரு வரிகள் கண்டேன்.
உன் அம்மா அற்புதம்
முற்றத்தில் முன் விறாந்தையில்
என் தலையணைக்கருகே
என் மனமறிந்து உலவுவாள்
இப்போதில்லை
அந்த இனிய சுகம்
நீயோ காதலர்க்கும்
கடும் போதைக்கும்
சரம்போல நிக்கிறாய்
என்று நீட்டினேன்
நிறுத்தென்று
தொடங்கியது காற்று
முட்டாள்
முற்றத்திருந்த
தாத்தா கால வேம்பை
கொளுத்த காசுக்கு
அறுத்தாய் குடித்தாய்
கும்மாளமடித்தாய்
ஏதுமுரைத்தாயா முன்னெனக்கு
லீசிங்கில்
வீட்டில் ஆளுக்கிரண்டு
மின் விசிறி
காலுக்கும் தலைக்கும் வைத்து
கால மோட்டும் உனக்கு
நானெதற்கு
பனை விசிறி
மறந்த உனக்கு
மல்லிகை மணத்துடன்
நான் வந்து
மெல்லிதாய் தடவவேண்டுமா
பண்டிகை பரவச சடங்கெல்லாம்
குளிரூட்டி வைத்து கொண்டாடி
பணப்பெருமை
பறை சாற்றும் உனக்கு
காதோரம்
சில்லென்று போகவேண்டுமா
இப்போதியலா
இனி வரும் மாரியில்
பத்து வேம்பு வை
அதுவரை நான் உன்னொடு
பழகுவதில் அர்த்தமில்லை
ஊடலுடன்
முன் வாசல் வழி
எங்கேயோ போனது காற்று.

பற்றை





போர்முடிந்து
பொல்லாத வேலிக்குள்
புதைந்திருந்து அகதி வாழ்வு முடித்து
மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி
பூண்டு பிடித்து
மாண்டு கிடக்கும் என் வளவை
மறுசீரமைத்து
தீண்டுவோம் வாழ்வையென்று
தெருவில் இருந்து இறங்கி
தேத்தண்ணி சாப்பாடு
தாங்கிய பொட்டலத்தை
ஆங்கிருந்த வேலிப்பூவரசில்
பூனை தொடாமல் பொருத்திவிட்டு
கூடைப்பையிருந்த
கொடுவாள் கத்தி எடுத்து
சூடை மீன் வெட்ட முன்
சுறுக்கென்று தீட்டும் கல்லில்
இரண்டிழுவை இழுத்து
கூர் தடவி
ஏக்கர் நிறைந்து கிடந்த
நாயுண்ணி பற்றைகளை
பூக்கள் காய்கள் உதிர
கொத்தாய் கொத்தாய்
குலையோடு வெட்டி
குவித்தான் மூலையில் நம்மாள்
அட நாசமாய்ப்போவானே!
ஒரு வார்த்தையேனும்
அந்த நாயுண்ணிகள் பற்றி
நவிலவில்லை அவன்
காணி கிடைத்த சந்தோசம்
ஏணி வைத்து ஏற
எட்டுப்பத்தறையில் வீடுகட்டி
ஏசி பூட்டி
எழுப்பம் விடுவதுதான் அவன் எண்ணமாக்கும்!
கொடுவாள் வெட்டில்
கூனிப்போய் குவிந்துகிடந்த
நாயுண்ணி மரங்களை காணும்போது
நாவில் பிறக்கிறது நம் காலவரிகள்
பத்தினால்தான் பத்தியப்படுபவரும்
மலசலம் இளகிப்போய் இதமாகும் என்பவரும்
வெத்திலை சப்பினால்தான்
வேலை ஓடும் என்றவரும்
முள்ளிவாய்க்காலில்
பத்து நாயுண்ணி இலை
பல நூறு காசுக்கு வாங்கி
சன்னமழைக்குள்ளும்
சப்பி விழுங்கியதை எப்படி மறக்க
இப்பொழுது அதன் பெயர் பத்தை
இன்னும் சில மணியில் அது
அவன் வைக்கும் தீயில் பஸ்பமாகிவிடும்
குத்து மதிப்பாய்
குவிந்துகிடக்கும் நாயுண்ணிகளை
முள்ளிவாய்க்கால் கணிப்பில்
கூட்டிக்கழித்துப்பார்க்கிறேன்
ஒரு எழுபது எண்பது இலட்சம் பெறும்
உதிர்ந்து போன நாயுண்ணிகள்
உள்ளத்தில் வலி கிளறாவிடில்
பறந்து போன பல இலட்சம் உயிர்களை
மறந்துபோனதுபோல் எண்ணுகிறது மனசு!

தேன் நிலவு





எட்டாம் வகுப்பில்
மொட்டவிழ்ந்த அவள்
மோகனச் சிரிப்பில்
மயங்கி
கட்டினால் இவள்தானென
கனவு நூறு கண்டு
கடிதம் குடுத்து
பதில் வரும்வரை
பசியிருந்து
ஒப்பேறிய காதலை
அவளும் நானும்
தாலி கட்டும்வரை
தடை உடைத்து செல்வதற்கு
கடந்த கால காதலர்கள்
கண்ட பல சாத்திரிகள் முன்
கை நீட்டி
காரியம் நிறைவேறும்
கைதொழுதால் என்ற கோயில்களில் நேர்த்தி வைத்து
காப்பு கட்டி காவடி கற்பூர சட்டியெடுத்து
முட்டுக் காலில் இருந்து
முந்நூறு மந்திரம் உச்சரித்து
வீட்டுக்கு நம் காதலை சொல்ல
ஆளமர்த்தி
அவரை அடிக்கடி ஆசுவாசப்படுத்தி
ஈற்றில் எச்சில் விழுங்கி விழுங்கி
எல்லாம் வீட்டில் கொட்டி
காற்றில் பறப்பது போலானோம்
கலியாண நாள்
கட்டினேன் நேற்றவள் கழுத்தில்தாலி
மாதுளம் பழமென மயங்கி
நின்றவளை
தேனிலவு தேதி சொன்னேன்
கசூரினா போகலாமா
சங்குப்பிட்டி பாலத்தில்
உரசி நின்று ஒரு செல்பி எடுக்கலாமா
காலி போய் காற்று வாங்குவோமா
கண்டி நுவரெலியா
கதகதப்பு தேடலாமா
என் கனவுகளை அடுக்கிவிட்டேன்
புன்னகையுடன்
அவள் சொன்னாள்
எவனாவது ஒருவன்
மறைந்திருந்து படமெடுத்து
இத்தனை வருட நம் காதலுக்கு
இணைய தளங்களில்
கள்ளக்காதலர்கள் களியாட்டமென பெயர் சூட்டுவான்
தேவையா என்றாள்
தெளிவாய் இருந்தது
தேன் நிலவு எனக்கு.

கால சூசி




இன்றைய இரவு உணவு
மூத்தவள்
பிறைட் றைஸ் வேணுமென்கிறாள்
இளையவள் கொத்து ரொட்டி
பையன் மசாலா தோசை.....
மனைவி புறுபுறுக்கிறாள்
ஆகச் செல்லம் குடுக்கிறியள்
விடும்
ஆசை தீர சாப்பிடட்டும்
ஆனாலும்
கிழமையில் ஒரு நாள் கஞ்சி
கட்டாய உணவு வீட்டில்
என்ன நிச்சயம்
முள்ளிவாய்க்கால் போல் இக்கட்டு
இவர்களுக்கு வராதென்று
வரலாற்று கஞ்சி
வயிறு நிறைய குடியும் மக்காள்.

அர்த்தம்




நண்பர் ஒருவரின் மகள்
குமரியான குதூகலத்திற்கு
மனைவி சகிதம்
மாமியையும் கூடவே அழைத்து
ஆட்டோ அமர்த்தி
ஆலாத்தி எடுக்கும் நேரம்
கூட்டத்தோடு கூட்டமாய் இறங்கி
வாட்டி எடுக்கும் வெயிலுக்கு
வாய்க்கு இரண்டு பேணி
குளிர்பானம் வாங்கிவிட்டு
வசதியாய்த்தான் செய்கிறான்
வாய்க்குள் முணுமுணுத்து
மனைவியை முன்னேவிட்டு
மாதரோடு ஆராத்தி எடுக்க வைத்து
பலகாரம் கடித்து
பால் ரொட்டி கடித்து
பந்தியில் போயிருந்து
பார்வையை சுழலவிட்டேன்
பத்திருபது பரம ஏழைகள்
பசியாறிக் கொண்டிருந்தனர்
என் உள்ளத்தில் பேருவகை
வெட்கத்தை விட்டு
இரு தடவை போடச்சொல்லி
சலரோகம் மறந்து
பாயாசம் வடை வாழைப்பழம்வரை
உண்டு ஓர் திருப்தியுடன் எழும்பினேன்
மனைவியை அழைத்துச்சொன்னேன்
உறையில் வைத்த ஆயிரத்துடன்
இன்னும் ஒன்பதாயிரம் சேர்த்து
பெட்டையின் கையில் கொடு என்றேன்
அர்த்தமுடன் பார்த்தாள் மனையாளெனை.

காக்கைகளின் அறிவிப்பு




உப்பளக்காற்றை இதயத்தின் வேர் வ ரை
சுவாசித்து கடக்கின்றேன்
ஆத்ம கறைகளை போக்குமென்பது
என் அசையாத நம்பிக்கை
ஆனையிறவின் கடல் வெளியில்
இறாலுக்காக மொய்த்துக்கிடக்கும்
சைபீரிய வாத்துக்களும் கொக்குகளும்
இடுப்பளவு உவருக்குள்
வலை கட்டி கொண்டிருக்கும் சிநேகிதனும்
உப்புச்சேற்று மணமும்
உடன் பிறந்த சகோதரர்களை போல
என் கவிதைக்குள்
அனுமதியற்று நுழைவது ஆச்சரியமல்ல
கஸ்தூரிகள் வேர்கொண்டிருந்த
கனவு வெளியில்
அனைத்துமே பூசிப்பதற்குரியதென்பது
ஆகாய கடல் வெளியில் இருந்து நீளும்
பாயிரங்களுக்குள் தொடர்வது
எஞ்சியிருக்கின்ற
பளையின் தென்னந்தோப்புகளில்
சோட்டியை
இடுப்பில் செருகிவிட்டு
மோட்டையில் ஊறப்போட்;ட கிடுகுகளை
இழுத்துவருவதும்
தொலைபேசியில் வானொலியை கேட்டபடி பின்னுவதும்
என் இதயத்துக்குள் இருக்கின்ற
சிலபல ஏக்க ஓட்டைகளை வேய்கின்றது.
இத்தாவில் பனைகள்
நிமிர்ந்த கொள்ளிகளாய் இருப்பது
புறநானூற்றின் காட்சிகளில்
இத்தாவில் பரணியை
ஈராயிரம் பாக்கள் கொண்ட
தளகர்த்தன் ஒருவனின்சன்னதத்தை
மழை காலங்களுக்கு முன்னும்
உல்லாச விடுதிகளை கட்டி
காதல் ஜோடிகள் கீதங்களை
காற்று சுமப்பதற்கு முன்னும்
எழுதி முடிக்கும்படி விண்ணப்பம் விடுவது.
முகமாலை கடந்துபோகிறபோது
யாராவது இன்று
தற்கொலை செய்துகிடக்கிறார்களா என
தண்டவாளங்களில் தேடுகிறேன்
தண்டவாளங்களுக்கு அருகில்
நிற்கின்ற எல்லோரும் விரக்தியுற்றவர்கள் போலவும்
இன்றோ நாளையோ
தூக்கில் தொங்கியோ
யாழ் தேவியின் முன் பாய்ந்தோ
செத்து விடுவார்கள்போல
எதிர்மறையாகவே எல்லாம் ஓடிவருகின்றது
ஒரே அல்ககோல் மணம்
எங்கிருந்து
நல்ல தண்ணீர் கிணற்று பக்கங்களில் இருந்தா
வாசிக சாலைகளில் இருந்தா
மதவடியில் இருந்தா
பள்ளிக்கூட பின் மதிலோரத்தில் இருந்தா
கோயில் கேணியடியில் இருந்தா
பஸ் தரிப்பிடங்களில்
வசதிப்பட இருக்கும் நிழல்குடைகளில் இருந்தா
அல்ககோலில் தலைசுற்றி குமட்டி
கிருசாந்தி புதைந்த
செம்மணித் தெருவில் தலைகுப்புற விழுந்துவிட்டேன்
ஐயோ நான் குடிக்கவில்லை
சத்தியமாய் சத்தியமாய்
சவுக்கு மரங்கள் தள்ளாடியபடி சிரித்தன
என்னைப்பார்த்து
வெட்கமில்லை வெட்கமில்லை
அவமானமில்லை அவமானமில்லை
சரித்திரம் சரித்திரம்
சவுக்கு மரங்கள் வேதமோதின எனக்கு
ஜயசுக்குறு காலத்தில்
கனராயன்குளத்தின்
கானகக்குருவிகள் கத்துவது
வாடா பாப்பம் வாடா பாப்பம் என
நிலாந்தன் என்ற பாவலனுக்கு கேட்டதுபோல
என்னை கடந்த போகும்
காக்கைகள் காகா காகா
கால் கால் கால் அரை அரை
ஒன்று ஒன்று ஒன்று
காகாகாகாகா
வெறி வெறி வெறி வெறி
குடி குடி குடி குடி
காக்கையை இனி நம்பமாட்டேன்
ஒ! காக்காய்
முற்றத்தில் பனையில் இருந்து
கரவெட்டியில் இருக்கும்
என் பேத்தி கிழவிக்கு என் வரவை
நீ அறிவித்திருக்கப்போவதில்லை
குளத்தடிக்கு நல்ல தண்ணிக்குபோய்
நீராடிவிட்டு
கூந்தல் நீர் வடிய வடிய
பின்னழகில் பரவி
மணலில் கால் புதைய புதைய நடந்துவரும்
என் அழகிக்கும் நீ எதையும் அறிவித்திருக்கப்போவதில்லை
நல்லூர் சந்தணத்தை எடுத்து
நாலாபுறமும்
வீசி நடந்தால் இந்த மணம் போய்விடுமா
மாதாவின் திருவடியில் இருக்கும் குங்கிலியத்தை எடுத்து
ஊர் முழுக்க ஓடினால் இந்த மணம் மாறிவிடுமா
அல்ககோல்
சந்தண வாசமென தலைதடவி
தாள் பணிந்து
மெய் மறந்து கிடக்கும் மண்ணில்
அவசரமாய் தேடிதேடி பொறுக்கி எடுத்து
ஈமத்தாழிகளுக்குள் போட்டு
பொன்பரப்பித் தீவுகளில் புதைத்திடவேண்டும்போல்
கடைசியாய் ஒரு கேள்வி
பணம் இல்லாவிட்டால்
என்ன செய்வீர்கள்
தட்சணாமூர்த்தியின் தவிலை விற்போம்
கந்தமுருகேசனாரின் முதுசத்தை விற்போம்
துரைராசாவின் கண்டு பிடிப்புக்களை அடைவு வைப்போம்
விபுலானந்தரும் குடித்தார் என்றும்
மதுப்பிரியர் என்றும் மாற்றிவைப்போம்
என்ன நினைக்க!

கரும் பலகை



வானவில்லை கீறினான் 
ஏழை சிறுவன் 
ஒரு கணம் 
பச்சை மஞ்சள் சிவப்பாய் ஊதாவாய்
மாற ஆசைப்பட்டது கரும்பலகை 
முயன்றால்
கை கொடுக்க நினைக்கும்
கரும் பலகைகளை
எல்லா தெருக்களிலும் சந்திக்கலா
ம்

மூத்தவன்




சண்டிக்கட்டுக்கள் அவிழுகின்றன
அது அது அந்தந்த இடங்களில்.......
அம்மா வாசலை வாசலை பார்க்கிறாள்
பட்டியல் ஒன்று அவளுக்குள்
மூத்தவன் வருகிறான்
மூத்தவன்
இன்னொரு பெயர் கழுதையாகலாம் சுமப்பதனால்
அப்பாவின் பார்வையை
அம்மாவின் முகத்தில் உள்ள சோர்வை
சரியாக மொழிபெயர்க்கக்கூடியவன்
இளையவர்களுக்காக
படிக்க
நல்லவனாக இருக்க
உழைக்க
கோபப்பட
கோபித்துக்கொண்டுபோய் திரும்பிவர
தன் காதலை புதைத்துவைக்க
சாப்பிடாமல் இருக்க
கொள்ளிவைக்க
மூத்தவன் பிறந்திருந்தான்
மூத்தவன்
போய்வருவது பற்றி
எங்கு ஏன் என்ற கேள்விகள்
இல்லாத காலம் அழகானது
போய்விட்ட மூத்தவன்
திரும்பிவராக்காலமும் அழகானது
திரும்பி வந்தபோது
அம்மா அப்பாவின் பேரழுகை
இளையவர்களை
மூத்தவனாய் இருக்கவைத்தது
இப்பொழுதும்
என் மூத்தவன் இருந்திருந்தால்
என தொடங்கும் அம்மாக்களின்
கண்களில் மூத்தவன்
கருக்கலுக்குள் பின்னிருக்கும் சூரியன்போல.....
கதவு தட்டப்பட்ட பொழுதுகளில்
மூத்தவன் திறந்த கதவுகளில் எழுதப்பட்டிருக்கும்
மர்ம இரவுகள்
இன்னும் விடியாமல் பல வீடுகளில்
எலும்பும் தோலுமான
அம்மாவின் சுருக்கங்களில்
மூத்தவன் பற்றிய சரித்திரத்தை எழுதிவைத்திருக்கிறது
மூத்தவனுக்குள் இருந்த காதலை
அம்மாவும்
இளையவர்களும் அறிய ஆவல்பட்ட பொழுதுகளில்
அவன் நிலவுக்குப்பின்
அழகிய நதிகளின் ஆழத்தில்
தன் காதலியை மறைத்து வைத்தான்
அவள் கூந்தல்பற்றிய
இரகசியத்திலும்
கண்கள் பற்றிய இளையவர்களின்
கற்பனையிலும் மிதக்கும்
ஒரு இளவரசிக்காய் காத்திருக்கும் வீட்டில்
ஒரு தாய் மாமனுக்கான கடமைக்குப்பின்னும்
ஒரு நாள் குறிக்க முடியாமல் போனதுண்டு!
நாள்பட்ட இளமையுடன்
அண்மையில் எச்சமாய் இருந்த மூத்தவன்
ஒரு முதிர்கன்னியை தேடிக்கண்டுபிடித்தது பற்றியும்
ஒரு நாள் குறித்து
வசந்தத்தை வரவழைக்க
கேள்விகள்
சட்டங்கள்
சாட்சியங்கள் கையொப்பங்கள் என
பட்டபாடு பற்றியும்சொன்னபோது
அவன் ஒரு தியாகச்சிலையாய் தோன்றினான்
இப்பொழுதுகளில்
மூத்தவர்கள்
எங்கே போகிறார்கள்
எங்கே வருகிறார்கள்
ஏன் போகிறார்கள்
என்ன செய்கிறார்கள்
கேட்பதும் அறிவதும்
துடக்கெனக் கொள்வோம்

சிரிப்பு!




நொந்து பெற்றாள்
நூறு ஜென்மத்துக்கான பிள்ளையென பெயரெடு
தந்துவிட்டுபோ
தாராளம் மேன்மைகளை இத்தரணிக்கு
சந்துபொந்துகளில்
சதா உன் நாமம் ஒலிக்கட்டும்
வெந்துபடி
வேதனைகளை படியாக்கு
சிந்து கண்ணீர்
வீணான போன
நிமிசங்கள் நினைத்துவேதனைப்படு
வெடுக்கென்றெழு
வித்தைகள்
உனக்குள் இருக்கென்று நினை
உந்துகணையாய் இரு
உதவாக்கரையென பேர் வேண்டாம்
அந்திவரை சூரியனாய் இரு
அடுத்து நிலவாய் எழு
நட்சத்திரங்களாய் பரவு
நாடெங்கும் நின் பெயர்பரவ
பிறவி எடுத்து நில்
இந்த நிமிசமும் உனக்கே
இனிவரும் காலங்கள் உனக்கே
ஏந்திவரும் புகழ்மாலைகள் உனக்கே
ஏற்றமிகு வாழ்வுனக்கே
ஆற்றல்மிகு அத்திபாரத்தை
ஆழத்தில் வைத்துவிட்டு
தூங்கிவிடாதே
தூரத்தே நாளைய உலகம்
உன் கோபுரதரிசனத்தில்
ஆயிரம் காலங்கள்
உன்னை அழைத்துச்செல்லட்டும்
ஏழைத்துயரினில் புறப்படும் சிரிப்பை
உலகம் நாளை
பாடப்புத்தகமாக்க படி
நற்குடிமகராகத் துடி

மனசு




4ஜி பியில் ஒரு வேப்பமரம் 
1 ஜி பியில் ஒரு மல்லிகை பந்தல் 
இடப்பழத்தை தின்னாதிருக்க
ரஜிதனின் குரங்கு கலைக்கும் மிசின் 
புழுதியை வடி கட்டிட பூவரசு நெட் 
போதும் என்கிறது மனசு
பொத்தி வைத்திருக்கும் புன்னகையை காக்க ...

பற்றை





போர்முடிந்து
பொல்லாத வேலிக்குள்
புதைந்திருந்து அகதி வாழ்வு முடித்து
மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி
பூண்டு பிடித்து
மாண்டு கிடக்கும் என் வளவை
மறுசீரமைத்து
தீண்டுவோம் வாழ்வையென்று
தெருவில் இருந்து இறங்கி
தேத்தண்ணி சாப்பாடு
தாங்கிய பொட்டலத்தை
ஆங்கிருந்த வேலிப்பூவரசில்
பூனை தொடாமல் பொருத்திவிட்டு
கூடைப்பையிருந்த
கொடுவாள் கத்தி எடுத்து
சூடை மீன் வெட்ட முன்
சுறுக்கென்று தீட்டும் கல்லில்
இரண்டிழுவை இழுத்து
கூர் தடவி
ஏக்கர் நிறைந்து கிடந்த
நாயுண்ணி பற்றைகளை
பூக்கள் காய்கள் உதிர
கொத்தாய் கொத்தாய்
குலையோடு வெட்டி
குவித்தான் மூலையில் நம்மாள்
அட நாசமாய்ப்போவானே!
ஒரு வார்த்தையேனும்
அந்த நாயுண்ணிகள் பற்றி
நவிலவில்லை அவன்
காணி கிடைத்த சந்தோசம்
ஏணி வைத்து ஏற
எட்டுப்பத்தறையில் வீடுகட்டி
ஏசி பூட்டி
எழுப்பம் விடுவதுதான் அவன் எண்ணமாக்கும்!
கொடுவாள் வெட்டில்
கூனிப்போய் குவிந்துகிடந்த
நாயுண்ணி மரங்களை காணும்போது
நாவில் பிறக்கிறது நம் காலவரிகள்
பத்தினால்தான் பத்தியப்படுபவரும்
மலசலம் இளகிப்போய் இதமாகும் என்பவரும்
வெத்திலை சப்பினால்தான்
வேலை ஓடும் என்றவரும்
முள்ளிவாய்க்காலில்
பத்து நாயுண்ணி இலை
பல நூறு காசுக்கு வாங்கி
சன்னமழைக்குள்ளும்
சப்பி விழுங்கியதை எப்படி மறக்க
இப்பொழுது அதன் பெயர் பத்தை
இன்னும் சில மணியில் அது
அவன் வைக்கும் தீயில் பஸ்பமாகிவிடும்
குத்து மதிப்பாய்
குவிந்துகிடக்கும் நாயுண்ணிகளை
முள்ளிவாய்க்கால் கணிப்பில்
கூட்டிக்கழித்துப்பார்க்கிறேன்
ஒரு எழுபது எண்பது இலட்சம் பெறும்
உதிர்ந்து போன நாயுண்ணிகள்
உள்ளத்தில் வலி கிளறாவிடில்
பறந்து போன பல இலட்சம் உயிர்களை
மறந்துபோனதுபோல் எண்ணுகிறது மனசு!

கச்சான் விலை




விலை கேட்டு
கேட்டு நீ
ஒற்றை சுருள் வாங்க முன்பு
பத்து பதினைந்துஉன் வாய்க்குள்
கல் என்கிறாய்
மண் என்கிறாய்
கருகல் என்கிறாய்
ஆனாலும்
ஒவ்வாதென
ஒங்காளித்தாய் இல்லை
நல்லாய் சப்பினாய்
பாவம் கிழவி விட்டுவிடு
மாதம் முழுக்க
மணல் பரவி
மார்பு நோக வறுத்து
உன் வாய் ருசி பார்ப்பதால்
கிழவியின் வாழ்வாதாரம் நாசம்
ஐயா தம்பி ராசா
உன் வாடிக்கை வேண்டாம் என்பதே
கிழவிக்கு இலாபம்

Sunday, July 17, 2016

பழைய சொற்கள்

இன்று நேரம் இரவு 11 மணி 
ஜெட் விமானங்கள் போய் கொண்டிருந்தன வானில்
யாருடையதோ தெரியவில்லை 
வெளியே போய் பார்த்தேன் 
பழைய சொற்கள் நினைவில் 
பங்கர்
பரா லைட்
போட்டிடான்
ஐயோ
பிள்ளைகளை பார்த்தேன்
ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்தார்கள்
புத்தக பைகள் சுவரில் தொங்கி கொண்டிருந்தன .......

தீர்க்கமற்ற பாடல்



காற்றில் அலைந்து சென்றேன்
கடதாசியாய்
துண்டு பிரசுரமென
ஒருவன் பார்த்தான் கிழித்தான்
இன்னொருவன்
பொறுக்கி பத்திரப்படுத்தினான்
மலராய் ஒரு செடியில்
இருந்து பார்த்தேன்
சம்பிரதாயங்கள் பறித்துச் சென்றன
ஒருநாள் வாழ்க்கையும் இல்லை
தெரு நாயாய்
எல்லா வீதியும் திரிந்தேன்
அங்கங்கு நக்கினேன்
ஏகப்பட்ட கல்லெறிகள்
காயங்கள்
ஏகப்பட்ட கேள்விகள்
தலைப்புக்களில் நான்
தீர்க்கமற்ற
பிறவியின்அச்சம் பரவுகிறது

யாழ்ப்பாண பஸ்



பரலோகம் போகும்
பாய்ச்சலில் வந்த
ப துளை யாழ்ப்பாண
பஸ்ஸினை மறித்து
இளம்பெடியொண்டு
இயக்கச்சியடியில்
ஏறினான் உள்ளே
இலங்கை வரைபடத்தின்
ஆறு நதிகள் போல்
தம்பி தலையிலும்
கோடு வளைவுகள்
உச்சி எது எண்டு
ஊகிக்க இயலாதபடி
தலையை பிச்சு எடுப்பதர்க்கு
குயில் அஞ்சு கொடுத்திருப்பான்
அப்பால் இருக்கையில்
ஆவரங்கால் போகும் அப்புவுக்கு
இவன் மீதொரு கண்
தன் பேரனின் நினைவு வந்திற்றோ
இல்லை
அரை மீதிருந்து தரை மீது
விழ வழுக்கும் இவனின்
அளவில்லா ஜீன்ஸ் மீது
அடிக்கடி தம்பி
வழுக்கி விழும் ஜீன்சை
இழுத்து விடும்
புதிய பண்பாட்டில்
ஆப்பிள் ரகமொன்றின்
ஆரஞ்சு நிறம்
பஸ்சுக்குள் இருப்போரின்
பார்வையை திருப்புகிறது
தம்பியோ தன் பாட்டில்
காதுக்குள் வயர்விட்டு
கைத்தாளம் போடுகிறான்
வரணி போறதுகள்
கொடி காமத்தில்
குதித்து விட
குங்கும் பூ நிறத்தில்
பிறப்பு கொழும்பா கொடி - காமமா
என அறிய முடியாதபடிக்கு
அலங்கார தேவதையாய்
ஏறி ஒன்றுஅலமந்து நிக்க
தம்பி முகத்தில் ஒரு தவிப்பு
கொஞ்ச நேரத்தில்
எங்க என்று கதையை தொடக்கி
கைதடிக்குள் காதலுருவாக்கி
அடுத்த பஸ் தரிப்பில்
கைகோர்த்து இறங்கி
காட்டிவிட்டான் புதிதொன்று
வேர்த்துக் கிடக்கிறது
பண்பாடு பிறந்த
பழைய பூமி

மரம்

ஒரு சிறு நேரம் கிடைத்தது 
முற்றத்தில் ஒழித்து பிடித்து விளையாடிய சிறுவர்களிடம் 
நானும் வாறேன் என்றேன் 
ஒரே சிரிப்பு அவர்களுக்கு 
ஓடி போய் 
ஒரு மரத்தின் பின் ஒழித்தேன்
நான் உன்னிடம் ஒழிக்கலாம்
என்றது மரம் !

ஓடிப்போனவனின் கதையிலிருந்து



ஓ! 
டாட்ரா கானகங்களே
ஹோ வன் லங்
ஹோ வன் தானை
வெளியே காட்டினீர்
எமக்காகவுமா
எமக்கும்
இரண்டு பேனாக்கள் தருகிறாயா
மூர்க்கத்துடன்
எதிர்த்து நின்றதும் வியட்நாம்
போருக்கு பயந்து
கைக்குழந்தை ஹோவன் லங்கை ஏந்தியபடி ஓடிய
ஹோவன் தானும் வியட்நாம்.
வியட்நாமை எழுதும் இரண்டு பேனாக்கள்
டாட்ரா முழுக்க
ஊரிழந்தவனின்ஏக்கம்
மனச்சாட்சிகளுக்கு இடையில்
நடந்தபோரில் இறந்து போன
ஹோவன் தானின் பிணங்கள்
டாட்ரா நிரம்ப
ஓடிப்போனவனை
வியட்நாமின் வீரர்களின் கல்லறைகள்
எழுந்து நின்று பார்க்கின்றன
ஹோவன் தன்
உணர்ச்சி மேலிட நிற்கின்றார்
ஹோவன் லங்
கானகங்களை பார்க்கின்றார்
ஓடிப்போனவனின்கதையில் இருந்தும்
தொடங்குகிறது ஒரு விடுதலை கீதம்
குறிப்பு...
வியட்நாமின் போர்க்காலத்தில் காட்டுக்குள் தன் கைகுழந்தையுடன் ஓடி தந்தையும் மகனும் நாற்பது ஆண்டு கழித்து சொந்த ஊர் வர நேர்ந்தபோது.

வானம்



அவ்வப்போது பறக்கும் பட்டாம்பூச்சிகள்
வாலறுந்து
மின்சாரக் கம்பியில் தொங்கும் பட்டங்கள்
டவர்களின் உச்சியில் ஒளிரும்
மஞ்சள் சிவப்பு வெளிச்சங்கள்
திடிரென எழுந்து பறக்கும் கடதாசி
குளத்து வெளியில் காயும்
சலவைத் தொழிலாளியிடம் கொடுத்த
நம் எல்லோரதும் பல வர்ண ஆடைகள்
திருவள்ளுவர் சிலையின்
தலையிலிருக்கும் காகம்
மணிக்கூட்டுக் கோபுரத்தில் உச்சியில்
கூடு கட்டிக்கொண்டிருக்கும் புறாக்கள்
காதலிக்காக
கைக்குள்
பொத்தி வைத்திருக்கும் மின்மினி
வானம்
என் கையிலிருந்து தொடங்குகிறது

கடை


காற்றுக்கடை ஒன்று திறந்தேன்
நல்ல வியாபாரம்
வரிசையில் நின்று
வாங்கினர் புயற்காற்று
இன்னும் பல நூறு ஓடர் செய்துள்ளது
புயற்காற்றுக்குத்தான்!
ஒரு பதினாறு பதினேழு பருவங்கள் சில
தென்றல் காற்று வாங்கிச்சென்றன
வயற்காற்றின் விலையை
ஒரு சில விசாரித்துச்சென்றுள்ளன
டயானாவின் கூந்தலை வருடிய காற்று
கிளியோபற்றாவின்
கன்னத்தை தொட்ட தென்றல்
நயன்தாராவின் புன்னகையில் குளிர்ந்த காற்று
சமந்தாவின் துப்பட்டாவை தீண்டிய காற்று
எமி ஜாக்சனின் இடையை தழுவிய காற்று
ஆஸ் மலைக்காற்று
இப்படியும் கேள்விகள் தொடர்கின்றன.
நீண்ட நேரம் துலாவி விட்டு
காந்தி பெரியார் சேகுவராவின்
கடைசி மூச்சிருக்கா என கேட்டு
எங்காவது ஒன்று
அடிப்பெட்டிகளை கிளறவைக்கின்றன
ஒரு பக்கத்தில்
மணலாற்று காற்று
கோணமலைக்காற்று
இரணைமடுக்காற்று
கற்சிலைமடு காற்று நந்திக்கடல் காற்றையும்
அடுக்கி வைத்து காத்திருக்கின்றேன்
புதிய காற்றொன்றை நோக்கி.....

வீடு




பாதிக்கப்பட்டோர்க்கு பரிகாரமாய்
பக்கத்து நாடு தந்த பணத்தில்
ஊருக்குள் ஒரே மாதிரி வீடுகள்
ஒன்று ஒரு பத்து லட்சம் வரும்
ஒரு சதமும் கூடாது
கதவு தொட்டு கக்கூசு வரை
எல்லா ம் ஒரே அளவு
கந்தப்பு வீடெது
கயிலாய பிள்ளை வீடெது எண்டு
கண்டு பிடிக்க கால் நாள் கழியும்
ஒண்ட முன்னுக்கு நீட்டி
மற்றதை பின்னால் பெருப்பிச்சு
இன்னொன்றை வாசலை மாத்தி
எழுப்பி பதிச்சு கட்டியிருக்கலாம்
கட்டியிருக்கலாம்
அகட்டினதுக்கு ஒரு சன்னதம்
நீட்டினதுக்கொரு சன்னதம்
ஆடியிருப்பார் ரீ ஓ
வேண்டாம் வில்லங்கமெண்டு
மகிளிர் கல்லூரி சீருடை போல
எல்லாம் ஒரே மாதிரி
இ டபம் சிங்கம் மீனம் மிதுனம்
கன்னி துலாம் எல்லாம்
இங்கதானே இருக்குது.

பாதம்



நேற்று தாய் வீடு சென்றபோது
நாற்பது ஆண்டுகளுக்கு முன்
கட்டப்பட்ட கிணற்றின்
வாசல் படியில் பதிந்திருந்த
குழந்தைப் பாதங்களின் மேல்
கால் வைத்தபோது
பின்னாளில் களத்தில் வீழ்ந்த
அயல் வீட்டு குட்டியின் குரல் கேட்டு
விளையாட சென்றுவிட்டன.

வல்லாரை




மரக்கறி வாங்க
மனுசி அனுப்பி விட்டாள்
மதாளித்த கீரை
மனசுக்கு விருப்பம்
விசாரித்துப் பார்ப்போமென
வீற்றூட் கரட் கத்தரிக்காய்
முள்ளங்கி வெங்காயம்
வாங்கோ வாங்கோவென
வரிசையாய்
அழைத்த குரல் கேட்டு
அங்கு போய்
வெண்டைக்காய் தக்காளி கரட்
கையிலெடுத்து
நல்லதோ என்றேன்
என்ன கதையிது
எல்லாம் தம்புள்ள
தரம் என்றான் நம்மாள்
முந்தி ஒரு காலத்தில்
முத்தவெளியில் கூடும்
சனி புதன் சந்தையிலே
தென்னக்கோன் லொறியில் வந்து
கப்பல் மொந்தன் கதலி
கறிமிளகாய் கத்தரிக்காய்
என்ன விலை முதலாளி
இறக்கி தாங்க விலையை
எல்லாத்தையும் ஏத்திறமே
என்றுதானே நின்றார்
பவளத்தின் தோட்டத்தில்
படைபடையாய் காய்த்து
பாகற்காய் கூட
முன்பொரு கால் இனித்ததெனக்கு
இன்றென் இதயத்தில் ஏதோ வலி
சந்தை வாசலுக்கு வந்து
எங்கள் வாய்க்காலோரத்திலும்
வயற் கரையிலும்
தேடித்திரிந்து பிடுங்கி
பிடியாய் கட்டி
காலை முதல் காய்கின்ற
காது கிழிந்த கிழவியிடம்
வாங்கினேன்
இரண்டு பிடி வல்லாரை
இன்று நம் பொருளாதாரம்.

Wednesday, July 6, 2016

சுயநலம்



மெல்லிடையாளாய் உனைக்கண்டேன்
மழை மேகத்திரள் போல
கன்னியுன் கூந்தலுக்கு
ஓர் கவிதை சூடவும்
ஏனோ மனம் ஒப்பவில்லை
வெண்ணிலவாக்கி உன் விழியில் நீந்தும்
எண்ணிலா மீன்களுக்கும்
ஏனோ நான் வலை வீசவில்லை
விண்ணிலா மண்ணிலா நீயுதித்தாயென
ஒரு வினாக் கூட நான் எழுப்பவில்லை
இன்பநாள் அருகி
ஏறுபோலொரு காளை பற்றி
தேனிலா காணும் திகட்டாத
நாள் பொழுதில்
இணையராகி நெருங்கி
நீ திரிய கண்டுநான்
உனை கடுகளவும் நினைத்தில்லை
இன்று நான் உனக்கு எழுதுகிறேன்
ஏன்
அது சுயநலம்தான்
முந்தநாள் உன் மேனி
முன்னே பெருத்து
முகமும் கொஞ்சம் மொளுமொளுத்து
சொன்னதுபார் சேதி
கர்ப்பமாய் இருக்கிறேன் என
கரம் பற்றியவனுக்கில்லா எழுச்சி எனக்கு
மெல்லமாய் நட
உள்ளத்தில் நல்ல உவகை கொள்;
கள்ளமாயும் கனக்க சாப்பிடு
முடிந்தால் பொன்னியின் செல்வனை
கொஞ்சம் புரட்டிப்பார்
பூவரசம் பூவை ரசி
சங்கிலியன் தோப்பு பக்கம் போய்வா
பாரதியின் பாடல்கள் கேள்
கணணியில் இருந்து விளையாடு
என்னவோ எனக்குத் தெரியாது
உன்னை நான் இப்பொழுது
பெண்ணென்று நினைக்கவில்லை
எம் மண்ணை நிரப்பப்போகும்
நல்ல மழையென பார்க்கிறேன்
நல்ல தமிழ் பிள்ளை பெற்றுத்தா
பெற்றுத்தா பெற்றுத்தா பெற்றுத்தா!

எனது நாள்



இன்று 
உங்கள் பிறந்த நாளாக இருக்கலாம்
உங்கள் காதலை சொன்ன நாள்
மற்றும் ஏமாந்த நாளாக கூட இருக்கலாம்
உங்கள் திருமண நாள்
மற்றும்
கனவுகள் தொலைந்த நாளாகவும் இருக்கலாம்
நீங்கள் பட்டம் பெற்ற மற்றும்
வேலைக்கு அலையத் தொடங்கிய
நாளாக கூட இருக்கலாம்
உங்கள் நேசத்துக்குரியவர்கள்
உயிர் பிரிந்த நாளாக கூட இருக்கலாம்
மன்னித்துக் கொள்ளுங்கள் என்னை
இன்று
சிறு வயதில் முதன்முதலில்
நான் வானவில்லை கண்ட நாள்
அது எங்கே முடிகிறதென
எட்டியும் பார்த்திருக்கிறேன்

யூலை 5




மூக்குக்கண்ணாடியோ
கண்ணாடிக்குவளையோ
கைத்தொலைபேசியோ
கைதவறி விழுகின்றபோது
பதறிப்போகின்ற எங்களின் மத்தியில்
நேற்று
உயிர் குவளையை வெடிக்கச்செய்தீர்கள்
சாக்கடையால் நிரம்பியிருக்கும்
எங்கள் வாழ்வின் மத்தியில்
உன்னத்தை எப்படி
எங்கே வைத்து அழகு பார்ப்பது
வாய்நிரம்ப எப்படி
அதை பாடுவது
கைபிசைந்து நிற்கிறேன்
எரிமலைக்குழம்புகள் மேல்
மயிலிறகால் எழுதப்படும்
இந்த புனித புராணத்தை
சீண்டப்பட்டுக்கொண்டிருக்கும்
காற்று வாங்கிக்கொண்டிருக்கும் காதலர்களோ
பனிமழையின் கீழ்
உதடு வெடித்துக்கொண்டிருக்கும் ஏதிலியோ
முடிவற்ற பிரிவுத்துயரத்தில்
பிறக்கும் சிலம்புச்சாலைகளோ
எழுதி முடிக்கும் என்பது நம்பிக்கை
வணங்க முடியாதவர்களின் புலம்பல்களாலும்
குமுற முடியாதவர்களின் மௌனத்தாலும்
இந்நாள் நிறைந்திருக்கிறது.....
பௌர்ணமியை மறைத்தெழுகிற வரிகள்
பிறைகளின் சாபங்களால் நிறைகிறது

பேய்கள்



ஒரு வித நிசப்தம்
சின்னாக்கள்
தள்ளிப்போங்கோ
ஆளாளுக்கு ஒரு பார்வை உறுக்கல்
பந்தத்துடன்
கறுத்த பருத்த ஒருவர்
அடுத்து கத்தியுடன் மற்றவர்
நடுவில்
உருசிபட ஆக்கிய
ஆக்கியகோழி ஆடு நண்டு இறால் கணவாய் பொரியல் துவையல்
பிட்டு இடியப்பம்
பழங்கள் அறுவகை பாக்கு வெத்திலை
பீடி சுருட்டு அரைப்போத்தல் சாராயம்
பெட்டியில் வைத்து
ஒற்றைப்பட ஒரு கூட்டம்
சந்திக்கு வந்து
பேய்க்கு படைத்து விட்டு திரும்புகையில்
காத்திருந்த நண்பர் கைவரிசையில்
கைக்கு வந்தது படையல்
உண்டு மகிழ்ந்தோம்
இன்றுவரை
அந்த இனிய நினைவுகளுடன்
மண்ணில் பல பேய்கள்
சந்திக்கழிப்புக்கள் கண்டால்
ஒரு நமட்டு சிரிப்புடன்.........

செம்மண் கறுப்பு



செம்மண்
எப்பொழுது பார்த்தாலும்
இச்சை தருவது
எதையாவது விதையென்று
எழுச்சி கொள்ளவைப்பது
தக்காளி வைத்துப்பார்
தங்கச்சங்கிலி தருவேன் என்றும்
பொயிலை வைத்துப்பார்
புதிய வீடு கட்டுவாய் என்றும்
வெங்காயம் வைத்துப்பார்
வெளிநாட்டு வாழ்க்கைதான் என்றும்
ஆசைதூண்டுவது போலிருக்கும்
ஓ! உண்மைதான்
கத்தரி வைப்போம் காடுபோல்
நடுவே கஞ்சா நடுவோம்
பக்கத்திலேய விற்றுக்
கோடி சம்பாதிக்க
காலம் கனிந்துளது இன்று என
தன் பத்தினியாள் கழுத்தில்
பளபளக்கும்
பத்துப்பவுண் தாலியை
பார்க்கிறது இக்கால பெருச்சாளி!

அதிஸ்டம்



பிரபல கணித வாத்தியார்
பென்சனியர் பேரம்பலம் எழுதுவது
வரம்பு கட்டி
நான் வளர்த்தெடுத்த
வணக்கத்துகுரிய மாணாக்கரே
எங்கெங்கோ உள்ளபோதும்
என் இதயத்தில் உள்ளீர்
உள்ளத்தைவிட்டு உதிர்கிறேன்
உங்களை நான் உயர் வரமென்பேன்
என் கைக்கடிகாரம் கழற்றி கறுவி
உங்கள் கன்னத்தில் மின்னிய
என் கைகளை ஒருமுறை பார்க்கிறேன்
எண்ணத்தில் உயர்ந்த நீங்கள் எழுதப்பட்டுள்ளீர்கள்
மடக்கை மனனத்தில்
தடக்கிவிழுந்த உங்களுக்கு
இடக்கை வலக்கை என்று
என் பிரம்பால்
தழும்புவர தாக்கியதும்
பின் ஓடிவந்து நீங்கள்
சேர் என்றழைக்க என் மனம் இளகியதும்
ஏன் அடித்தேன் என்று
இருத்திவைத்து உங்களுக்கு
மனம் திறந்து பேசியதும்
கடைசிவரை உங்கள்
தாயும் தந்தையும்
சேர் உங்களை நம்பித்தான்
இராப்பகலாய் இவர்களுக்காய்
ஓடாய்த்தேய்கிறோம்
அடித்தாலும் உதைத்தாலும்
ஏன் என்று கேட்கோம்
உருப்படியாய் இவர்களை
உய்வித்தால் போதுமென்பதும்
இப்பொழுது நினைத்தால் இனிக்கிறது
எப்பேற்பட்டது அந்த உறவு
காக்கட்டையில் என்னை காணும்போதே
தெருவில் ஒதுங்கி நின்று
வணக்கம் சொன்ன வளர்ப்பினில்
இன்று உங்களை வைத்தியனாய்
வாத்தியாராய் எக்கவுண்டன் எஞ்சினியராய்
சிந்தனை செயற்பாட்டாளராய் காணும்போது
வேளைக்கே நான் வாத்தியாராயும்
நீங்கள் மாணாக்கராயும் இருக்க வாய்த்தது
இப்பிறவி அதிஸ்டம் என்பேன்!

வேதம்




தெய்வங்கள் விரும்பிய உணவை
நாம் அறிந்திருந்தோம்
கடவுளருக்கு
எந்த ஆடை அழகென்றும்
அளவு அழகு பார்த்து அறிந்திருந்தோம்
இதயம் தொடும்வரை
தெய்வங்களோடு பேசிபேசி
அன்பு மொழியொன்று ஆக்கியிருந்தோம்
நினைத்து நினைத்துப் போனோம்
நாங்கள் போகும்போதுதான்
அந்த ஆலயங்களில் மணியொலி
அந்தக்கடவுளருக்கு பள்ளியெழுச்சி
நெக்குருக கசிந்து நின்றோம்
மூலஸ்தானத்தையும் தாண்டி
எமக்கு ஒரு இடம்
தெய்வங்கள் தந்திருந்தன
ஆரத்தழுவி
அந்த முற்றத்தில்
முழுநாளும் நாம் பூஜை செய்திருந்தோம்
அந்த ஆலயத்தில்
நாங்கள் எல்லோரும்அர்ச்சகர்கள்
கற்பூர ஆராத்தி காட்டினோம்
கொன்றையிலை
புன்னையிலை
வில்வமிலை
வேப்பிலை
மாவிலை வரிசையில்
எருக்கலையை சேர்க்கிறேன் நான்.......
எருக்கலை மாடத்தை வணங்கிய முனியென
வரலாறு அமையட்டும்....

Sunday, July 3, 2016


பெருங்கோபுரம்





ராஜராஜசோழன்
பெருங்கோபுரத்தை கட்ட
எத்தனை பேர்
எத்தனை நாட்கள்...
எப்படிகட்டினார்கள்
படித்ததுபோதும்.
பெருமையடித்து பீற்றியதுபோதும்
ராஜராஜசோழனின் பேரனின்
பல்லாயிரம் கல்லறைகளை
உடைத்தெறிந்தார்கள்  எப்படி
யார் உடைத்தார்கள்
எங்கு உடைத்தார்கள்
தேடுங்கள்
கண்ணீர்விடுங்கள்
கோபப்படுங்கள்
ராஜராஜசோழனின் கோபுரத்தையாவது
காப்பாற்றவேண்டாமா