Thursday, September 15, 2016



வேதனையுடன் பொன்.காந்தன் ஈழத்தில் இருந்து ......








தம்பி விக்னேஸ் நீ போய்விட்டாயாம்
நீதான் நெருப்பு
அதை அறிவிக்க வேறு பலவழிகள் இருந்தன
நீ இறந்து போனது முட்டாள் தனம்
நீ என் தம்பி என்பதற்காக
உன் முடிவை ஆமோதிக்க முடியாது
நீ நெருப்பு
நீ இருந்திருக்க வேண்டியவன்
இறந்திருக்க வேண்டியவன் அல்ல
நீ கட்சியின் தொண்டன் அல்ல
நீ தமிழர்களின் தொண்டன்
நீ இருந்திருக்கவேண்டியவன்
நீ உண்மையானவன்
நீ இறந்திருக்க வேண்டியவன் அல்ல
பால்வடியும் உன் முகத்திற்கு
நான் தலைசாய்க்கின்றேன் வணங்குகின்றேன்
நீ போயிருக்கக்கூடாது
உனக்கென இன்னும் கடமைகள் இருந்தது
நீ பொறுமை காத்திருக்கவேண்டும்
நான் காவிரிக்காக இரங்கவில்லை
அது சித்து விளையாட்டு
உனக்காக கலங்குகின்றேன்
அடுத்த சூப்பர் ஸ்ரார் யாரென்று
வாக்கெடுப்பு நடத்துகின்ற இளைஞர்கள் மத்தியில்
உன்னுயிர் எத்தனை மாபெரிது தெரியுமா
சானல்களுக்கும்
அங்கு தெரிகிற சதைகளின் இடைவெளிகளுக்குள்ளும்
சதா தொலைகின்ற இன்றைய
இளைய தலைமுறைகள் மத்தியில்
நீ மாபெரும் கோபுரம் என்பதை ஏன் அறிந்திருக்காது விட்டாய்
நீ உன் இறுதி வார்த்தைகளை
கடித வடிவில் எழுதிக்கொண்டிருந்த
அந்தக் கணத்திலும்
நீ தீயில் கருகிக் கொண்டிருந்த
அந்தக்கணத்திலும்
நீ உயிருக்காக போராடிக்கொண்டிருந்த
அந்தக்கணத்திலும்
உன் கடைசி மூச்சு காற்றில்
அந்தக்கணத்திலும்
தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாட்டிலும்
ஏன் நீ நே
சித்த ஈழத்திலும் கூட
தொலைக்காட்சித் தொடர்களையும்
நட்சத்திர களியாட்டங்களையும்
ஒரு கூட்டம் பார்த்துக்கொண்டிருந்தது
அந்த கூட்டத்தின் பெயரும் தமிழர்கள்தான்
அறிவாயா தம்பி
இன்றில்லை எனில் நாளை நாம் வெல்வோம்
அதற்காய் நீ வேண்டும்
யாருக்காகவோ
உனது பெருமைமிக்க உயிரை
நாம் தொலைத்துவிட்டோம் என்றே எண்ணுகின்றோம்.
அன்னியனை அடக்குவதும் வெல்வதும் வெகுசுலபம்
அதற்கு நல்ல தலைமை வேண்டும்
எத்தனை பேர் தமிழர்களுக்கு தலைமை தாங்குகிறார்கள்
நீ எண்ணிப்பார்த்திருந்தால்
உன் உயிர் வீணாகவே போகும் என்பதை உணர்ந்திருப்பாய் தம்பி
ஏன் நீ கூட உலகத்தமிழர்களின்
தன்னிகரற்ற தலைவனாய் இருந்திருக்கலாம்
நான் நினைக்கிறேன்
தன்னிகரற்ற எங்கள் நாளைய தலைவன்
பிரிந்துவிட்டான் என்றே!