Sunday, June 10, 2012


சாமான்ய மன்னனின் பயணக்குறிப்பு ....................



-பொன்.காந்தன் 

எனக்கு மூன்று புரவிகள் வேண்டும

திக் விஜயம் போ

ஒன்று பூக்களோடு செல்ல

ஒன்று  வாளோடு செல்ல

ஒன்று எதுவுமற்று .......

மன்னர்களே !

மன்னர்களே !

 உங்கள் சாம்ராஜ்யமும்

சேடிகளும் அந்தபுரங்களும்

எனக்கு தேவைப்படாது

நீங்கள் எழுப்பிய

காவல் கோபுரங்கள்

மந்திரிகள் ஒற்றர்கள்

எல்லாம் பெருமைக்குரியவை ....

எல்லாமும் உங்களுக்கு தேவை

துயர் அறியா உங்கள் நெஞ்சமும்

துளி அறியா விழிகளும்

இந்த உலகத்துக்கு தேவை.

மன்னர்களே !

மன்னர்களே !

உங்கள் மனதின் சுவர்களை மட்டும்

அகற்றி விடுக!

நான் புறப்பட்டு விட்டேன் .