Monday, March 5, 2012

பிணங்கள் பற்றிய பேச்சு..............


பொன்.காந்தன்.







இன்றையைப் பொறுத்தமட்டில்
தமிழர்களின் மரணங்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல
அவர்களின் உடல்கள் துண்டு துண்டாக சிதறி இருக்கலாம்

அவை ஒன்றும் பெரிதே அல்ல
எமது இளம் பிஞ்சுகள்

சுதந்திரம் வேண்டுமென முப்பது நாற்பது வருடங்களாக
ஒவ்வொரு களத்திலும் மடிந்திருக்கலாம்
உண்மையாக அவையெல்லாம்
முட்டாள்களின் முடிவு
காணாமல் போனவர்களை கடத்தப்பட்டவர்களை
தேடி தேடி தேய்ந்த தமிழ் உறவுகளின் வலி
அவையெல்லாம் வெறும் தூசு
எனக்கு ஞாபகம் இருக்கின்றது
ஐ.நா சபையே! சர்வதேசமே!
எமைப்பார்க்காயே பேசாயோ என்று
இன்று அந்த சபை முழுக்க
எமைப்பற்றி பேசுகின்றது
எம் பிரதிநிதிகளோ
ஈழ மண்ணில் நடந்த மரணங்களைவிட
இன்னும் அதிகம் நடந்திருக்கவேண்டுமென்று
எண்ணுகிறார்கள்போல்.





நண்பர்களே!
மரணத்தைவிட
கொலைகளைவிட
ஒரு மனிதன் போபமுறுவதற்கும்
ஒவென்று அழுவதற்கும் வேறேதும் உண்டா!
இன்று ஜெனிவா என்ற வார்த்தையும்
ஐ.நா என்ற வார்த்தையும்

தமிழர் பிரதிநிதிகளின்
காலடியிலும் சிங்கள பிரதிநிதிகள் காலடியிலும்
அர்;த்தமற்றதொன்றாக அவமானப்பட்டுக்கிடக்கின்றது.
ஐ.நா சபையையும் விட நமது மனித உரிமைகள்
பற்றி பேசுவதற்கு வேறு சபைகள் உண்டா
எமது பிரதிநிதிகளிடம் கேட்டுப்பார்க்கின்றேன.;
சிங்களவர்கள் எம்மை கொல்லும்போது
அதுதான் அதிகவலி என்று நினைத்தோம்.
ஆனால்
எமது பிரதிநிதிகள் எம்மைபற்றி பேசாதபோது
அதைவிட வலிக்கிறது இப்போது
என்கிறார்கள் எமது மக்கள்.






நாங்கள் நம்பிக்கையுடன் தெரிவுசெய்த

நம் பிரதிநிதிகளே!
உங்கள் உயிர்கள் மீதும்
உங்கள் குடும்பம் மீதும்
அதிக பிரியமாய் இருக்கிறீர்கள்
எவ்வளவு அற்புதமானது.
அப்படித்தான் கொல்லப்பட்ட
ஆயிரமாயிரம் தமிழ் உயிர்களும்
தங்கள் உயிர்கள் மீதும்
தங்கள் மீதும் மிகவும் பிரியமாய் இருந்தார்கள்.
எம் மக்களின் மரணங்கள் பற்றி பேசாத
அக்கணமே
உங்கள் மரணங்கள் நடந்தேறிவிட்டது
மக்கள் உங்கள் பிணங்கள் பற்றி
பேச ஆரம்பித்துவிட்டார்கள்