Saturday, September 24, 2011

ஆளுமையுள்ள எமது மண்ணை நிர்வகிக்க வல்ல மாணவ சமுகத்தை


ஆளுமையுள்ள எமது மண்ணை நிர்வகிக்க வல்ல மாணவ சமுகத்தை
உருவாக்க நாம் பாடுபடுவோம்
வாழவைப்போம்  அமைப்பின் உதவிகளை கோட்டைகட்டியகுளம் பாடசாலைக்கு
வழங்கிவைத்து சிறிதரன் எம்.பியின் செயலாளர்




முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டைகட்டி பாடசாலை
மீண்டும் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களின் முயற்சியால் முன்னேற்ற
ஏணியில் கால்பதித்து சிகரங்களை தொட பெரும் அவாக்கொண்டுள்ளது.
கிராமப்புறப்பாடசாலையாக இருக்கின்ற இப்பாடசாலை முல்லை மாவட்ட
மற்றும் கிளிநொச்சி மாவட்ட நகர்பகுதிகளில் இருந்து மிகவும் தொலைவில்
இருக்கும் நிலையில் அது தன்னுடைய இயல்பான கல்வி மற்றும் வாழ்க்கை
சூழலை அடைவதற்கு மிகவும் சிரமங்களை சவால்களை சந்திக்க
வேண்டியிருப்பது யதார்த்தம். எனினும் தங்கள் தேவைகளை நிவர்த்தி
செய்ய இப்பள்ளிச் சமுகம் எடுத்திருக்கின்ற முயற்சியின் பயன்களில் ஒன்றாக
கிளிநொச்சி மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஏற்பாட்டின் கீழ் கனடா
வாழவைப்போம் அமைப்பு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வு பாடசாலையின் ஆசிரியர் திவாகர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளர் பொன்.காந்தன் கிளிநொச்சிமாவட்ட
த.தே.கூட்டமைப்பு அமைப்பாளர் வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் கௌரவ
உறுப்பினர்களான  தயாபரன் மற்றும் சுகந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல்
உபகரணங்களையும் பாடசாலையின் நூலகத்திற்கான ஒரு தொகுதி நூல்களையும்
வழங்கி வைத்தனர். இங்கு பா.உறுப்பினரின் செயலாளர் கருத்துரைக்கையில்
முல்லை மண் வரலாறுகளின் பெட்டகம் . அதற்கென்றொரு தனி அத்தியாயம்
தமிழர்களின் வரலாற்றில் இருக்கின்றது. அத்தகைய புகழ்வாய்ந்த ஈகம் நிறைந்த
புனித மண்ணிலே இப்பாடசாலை அமைந்திருக்கின்றது.தமிழர்களாகிய எமது
வரலாற்றில் பலமுறை பேரிழப்புக்களையும் நெருக்கடிகளையும் சந்தித்திருக்கின்றோம்.
ஆனாலும் அதிலிருந்து நாம் மீண்டெழுந்து மீண்டும் புது மிடுக்கொடு பயணித்தது
வரலாறு.இது உலகில் புகழ்பெற்ற இதையும் கடந்த போவோம் என்றவாசகத்தை நினைவுபடுத்துகின்றது.
உண்மையில் நாம் கடந்த முள்ளிவாய்க்கால் போரிலே சத்தித்த இழப்புக்கள் மானுட வரலாற்றிலே
வார்த்தைகளில் வடித்திடமுடியா கொடுரம்மிக்கவை அப்பெரும் கொலை வெளியை கடந்தே
வந்திருக்கின்றோம்.இன்று எம்மிடம் எதுவுமில்லை நினைவுகள் சுமந்த இதயங்களை தவிர.
ஆனால் அது தான் எம்மைவழிநடத்திச்செல்லும் ஆதர்சம் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்
அந்த பயணத்தில் உலகை எமது  திசையில் நிலைக்கவைக்க நாம் எமது அறிவுக்கு பொக்கிசமாக
இருக்கக்ககூடிய மாணவ சமுகத்தை கட்டியெழுப்ப முனைப்புடன் செயற்பட வேண்டும்.அதற்காக
புலம்பெயர் சமுகம் தயாராக இருக்கின்றது.அதற்கு பாலமாக பா.உறுப்பினர் சிறீதரனும் அவர்
சார்ந்தவர்களும் என்றும் பாடுபட தயாராக இருக்கின்றோம்  நாளை நமது மண்ணை
நிர்வகிக்க இருக்கும் இன்றைய மாணவர்களுக்கு உதவ வேண்டியது காலக்கடமை என்றார்.
தொடர்ந்து அங்கு கலந்து கொண்ட பெற்றார்கள் மாலை நேரக்கல்வியை மேற்கொள்வதற்கு
உதவுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் க.பொ.சா.தர பரீட்சைக்கு இன்னும் சில மாதங்களே
இருக்கும் நிலையில் முக்கியமாக கணிதபாடத்திற்கு நிரந்தர ஆசிரியர் பாடசாலையில்
இல்லாது இருப்பதை மிகவும் கவலையோடு சுட்டிக்காட்டினர்.அதே வேளையில் போக்குவரத்து
வசதிகளும் குறைபாடோடு இருப்பதாக கருத்துரைத்தனர். முல்லை கோட்டைகட்டிய பாடசாலையின்
மாணவர்களின் எதிர் காலத்தில் அக்கறை செலுத்தவேணடியது எல்லோரதும் கடமையாக
இருப்பதுடன் அப்பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் முயற்சிகள் மெச்சத்தக்கவையாகவும்
அமைந்திருக்கின்றது.