Tuesday, April 17, 2012

உண்மை



பொன் காந்தன்

வலிய கிளைகளில் வந்தபோதும்
கனிகள் வீழத்தான் செய்தன
நறு மண மலர்களுக்கிடையில்
தனித்திருக்கிறது எனது பயமொன்று
அது எல்லாவற்றையும்
இறுக பற்றிகொள்கிறது
 மகா பொய்யை உணர்ந்ததாக....
எல்லா உண்மைகளோடும்
நான் புறப்பட்டபோதும்
முகமூடி வியாபாரி
ஒன்று வாங்குங்கள் என்று கெஞ்சுகிறான்
நல்ல கலப்பற்ற
உண்மையான முகமூடி என்கிறான்
முகமூடி ஒன்று வாங்கினேன் ...