Tuesday, August 7, 2012

முடியாதவனின் குரல்


-பொன்காந்தன்


மிக மிக  தொலைவில் ஒரு பையன் நிக்கிறான்
அது மிகப்பெரும் தொலைவு
மிகவும் ஆவலாய் இருக்கிறேன்
முடியாத காரியம்
முடியவே முடியாத காரியம்
அவனை பார்க்க எல்லையற்ற ஆவல் கொண்டுள்ளேன்
இது ஒரு முடியாதவனின் குரலாக
நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்
பறவாய்இல்லை
அதை பற்றி கவலையும் இல்லை
இப்போது மட்டும்
மந்திரங்கள் மீதும்
மாந்திரிகங்கள் மீதும்
ஒரு தேடல் வந்துள்ளது
அவனை அறிந்திடல் வேண்டும்
ஏதேனும் உருவம்
என்ன வரம் வேண்டுமென கேட்காதா?
இது ஏலாவாளியின் புலம்பலாக
எடுத்துக்கொண்டாலும் எனக்கு கவலையில்லை
அவன் கண்ணில்
கைகளில் உதடுகளில்
என்ன இருக்கிறது
எனக்கு தெரிந்தாகவேண்டும்
நம்பிக்கையோடு மரணி என்று
ஓர் வார்த்தை உதிர்வானா !