Friday, April 13, 2012

ஞானம்

 பொன்காந்தன்


கல்லறையில் மோதி
இறந்து கிடக்கின்றன
சில வண்ணத்து பூச்சிகள்
சுற்றி
மலர்ந்து கிடக்கின்றன
பலவண்ண பூக்கள்
அப்பாவுக்காக அழவும்
என் பிள்ளைக்காக சிரிக்கவும்
நான் எழுதப்படுவதாய் உணர்கிறேன்

பதினாறு

  -பொன்காந்தன்


பக்குவமாய் சொன்னேன்
பதினாறு கேட்கவில்லை
சொர்க்கமென எதை நினைத்தோ
சுழல்கிறது மயக்கத்தில்
வெட்கமென சொன்னேன்
... வீண் பேச்சு என்றது
துக்கம் வரும் என்றேன்
தூ நாயே என்றது
பக்குவமாய் சொன்னேன்
பதினாறு கேட்கவில்லை
அக்கம் பக்கம் பார்த்தேன்
அறைந்தேன் பளாரென்று !

வருடங்கள் வந்து போகும்


-பொன்காந்தன்


ஓட்டைகைகள் நூறு குடிசை
ஒவொரு வீடும் பிச்சை
தேட்டங்கள் ஏதுமில்லை
தெளிந்திட வழியுமில்லை
கூற்றுவன் ஆட்சி இங்கு
குனிந்துதான் நடக்கவேண்டும்
மாற்றிட வழிகள் கண்டால்
மர்மமாய் மரணம் கூடும்
ஏறிய விலையின் வாசி
எதிலுமே சிரமம் சிரமம்
... காய்ந்த மண்ணில் வந்து
கவட்டினை காட்டிக்கொண்டு
களிப்பு நடனமிட்டு
விழாக்கள் தினமெடுத்தால்
உரிமை பிரைச்சனைகள்
ஓடி மறைந்திடுமோ
வறண்டு கிடப்பவர்க்கு
வழிகள் ஏதுமில்லை
வாட்டி எடுக்கிறது
வஞ்சகர் ஆட்சி இங்கு
பரவசம் ஆவதற்கு
இப்பா எழுதவில்லை
விதியினை நொந்து வரும்
வேதனை வரிகள் இவை
மடையர்கள் ஆளும் மண்ணில்
புதியன என்று நின்று
பூரிக்க முடியவில்லை
வருடங்கள் வந்து போகும்
எம் வாழ்க்கையோ அன்றும் வேகும்

சிரமம்


  -பொன் காந்தன்


ஓட்டைகைகள் நூறு குடிசை
ஒவொரு வீடும் பிச்சை
தேட்டங்கள் ஏதுமில்லை
தெளிந்திட வழியுமில்லை
கூற்றுவன் ஆட்சி இங்கு
குனிந்துதான் நடக்கவேண்டும்
மாற்றிட வழிகள் கண்டால்
மர்மமாய் மரணம் கூடும்
ஏறிய விலையின் வாசி
எதிலுமே சிரமம் சிரமம்
... காய்ந்த மண்ணில் வந்து
கவட்டினை காட்டிக்கொண்டு
களிப்பு நடனமிட்டு
விழாக்கள் தினமெடுத்தால்
உரிமை பிரைச்சனைகள்
ஓடி மறைந்திடுமோ
வறண்டு கிடப்பவர்க்கு
வழிகள் ஏதுமில்லை
வாட்டி எடுக்கிறது
வஞ்சகர் ஆட்சி இங்கு
பரவசம் ஆவதற்கு
இப்பா எழுதவில்ரும்
வேதனை வரிகள் இவை
மடையர்கள் ஆளும் மண்ணில்
புதியன என்று நின்று
பூரிக்க முடியவில்லை
வருடங்கள் வந்து போகும்
எம் வாழ்க்கையோ அன்றும் வேகும்