Friday, April 13, 2012

பதினாறு

  -பொன்காந்தன்


பக்குவமாய் சொன்னேன்
பதினாறு கேட்கவில்லை
சொர்க்கமென எதை நினைத்தோ
சுழல்கிறது மயக்கத்தில்
வெட்கமென சொன்னேன்
... வீண் பேச்சு என்றது
துக்கம் வரும் என்றேன்
தூ நாயே என்றது
பக்குவமாய் சொன்னேன்
பதினாறு கேட்கவில்லை
அக்கம் பக்கம் பார்த்தேன்
அறைந்தேன் பளாரென்று !

No comments:

Post a Comment