Tuesday, October 4, 2011

ஈரவிழி

பொன்.காந்தன்



அவள் கண்களின் ஸ்பரிசத்தை தவறிய நாட்கள்
ஆயிரம் குழந்தைகளை கையில் இழந்த கணப்பொழுதுகள்
பாதியில் முடிந்து போன புன்னகை முகங்கள்
பயணத்தில் தவறவிட்ட என் காற்றின்துளிகள்
மீதியின்றி ஊழி தின்ற என் சந்தோசங்கள்
மீழ வழியின்றி நான் தவிக்கும் தவிப்பு
மீண்டும் எழத்துடிக்கும் எனதேக்கம்
எனது ஆடையை தேடும் அலைச்சல்
மானத்தை காக்க நான் படும் அன்றாடம்
எனது முகவரியை எழுதமுயலும் இதயத்துடிப்பு
என் ஈரவிழிகளில் தெரிகிறதா!

No comments:

Post a Comment