Saturday, February 5, 2011

உனது வரவுக்குறிப்பு


பொன்.காந்தன்

ஏது மற்றதில் நீ துணிந்து மலர்ந்தாய்
நம்பிக்கையோடு
உன்னிடம் எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம்
எல்லாப்பின்னணியிலும் நீஅழகாகவே இருப்பாய்
இதுவரை வெளிகளில் ஒளி நிரம்பியிருந்தது
காற்று நிரம்பியிருந்தது
யாரும் கண்டிலர்.
எல்லார் கண்களிலும்
வெளி நிரம்பியிருந்தது ஏதுமற்று
உனது வரவிற்கு நன்றி
இப்போது கனவு காண்பதற்கு
ஏதுமில்லாமல் போய்கொண்டிருக்கிறது
நீ அருளுமல்ல
மந்திரமுமல்ல
பூச்சியமுமல்ல
ஆச்சரியமுமல்ல
நீ விரலும் விரலும்
பாதமும் பாதமும்
கண்களும் கண்களும்
தெரியாமல் கரையும் புரிதல்
நிரம்பி வழியும் நிசம்
எப்போதும் ஒரு வெற்றிடத்தோடு
உனதருகில் வருகிறேன்
நீ நிரப்புவதில்தான் அழகு அர்த்தம்
இப்போது தண்ணீருமுண்டு தாகமுமுண்டு
தண்ணீருமில்லை தாகமுமில்லை
உனது வரவால் வாசல்கள் அழகுபெற்றன
ஓ வரவே கவிதையற்ற மனசில் சாய்கிறாய்
எங்கிருந்தோ தொடங்கி
எங்கேயோ முடிக்கப்போகிறேன்
அந்தக் கண்ணீரையும்
இந்த இன்பங்களையும்.
-----------------------------------------

No comments:

Post a Comment