Friday, April 13, 2012

வருடங்கள் வந்து போகும்


-பொன்காந்தன்


ஓட்டைகைகள் நூறு குடிசை
ஒவொரு வீடும் பிச்சை
தேட்டங்கள் ஏதுமில்லை
தெளிந்திட வழியுமில்லை
கூற்றுவன் ஆட்சி இங்கு
குனிந்துதான் நடக்கவேண்டும்
மாற்றிட வழிகள் கண்டால்
மர்மமாய் மரணம் கூடும்
ஏறிய விலையின் வாசி
எதிலுமே சிரமம் சிரமம்
... காய்ந்த மண்ணில் வந்து
கவட்டினை காட்டிக்கொண்டு
களிப்பு நடனமிட்டு
விழாக்கள் தினமெடுத்தால்
உரிமை பிரைச்சனைகள்
ஓடி மறைந்திடுமோ
வறண்டு கிடப்பவர்க்கு
வழிகள் ஏதுமில்லை
வாட்டி எடுக்கிறது
வஞ்சகர் ஆட்சி இங்கு
பரவசம் ஆவதற்கு
இப்பா எழுதவில்லை
விதியினை நொந்து வரும்
வேதனை வரிகள் இவை
மடையர்கள் ஆளும் மண்ணில்
புதியன என்று நின்று
பூரிக்க முடியவில்லை
வருடங்கள் வந்து போகும்
எம் வாழ்க்கையோ அன்றும் வேகும்

No comments:

Post a Comment