Friday, April 13, 2012

ஞானம்

 பொன்காந்தன்


கல்லறையில் மோதி
இறந்து கிடக்கின்றன
சில வண்ணத்து பூச்சிகள்
சுற்றி
மலர்ந்து கிடக்கின்றன
பலவண்ண பூக்கள்
அப்பாவுக்காக அழவும்
என் பிள்ளைக்காக சிரிக்கவும்
நான் எழுதப்படுவதாய் உணர்கிறேன்

No comments:

Post a Comment