Monday, September 12, 2016

சந்திப்பு +காலம்




அவர் நீண்ட காலத்திற்கு பின்
என்னை சந்தித்தார்
கனகாலம் நலமா என்றார்
நலம் என்றேன்
காந்தன் எப்பிடியிருக்கிறான் என்றார்
அதிர்ந்து போனேன்
அது நான்தான் என்பதற்கிடையில்
பழைய மாதிரி
இப்பவும் அவன் குழப்படியா என்றார்
இல்லை இல்லை
இப்ப குறைவு என்றேன்
அரசியல் தேசியம் எண்டு
ஏதோ கத்துறான் என்றார்
எப்பவும் அதுதான் என்றேன்
கவிதையெண்டும் ஏதோ
இடைக்கிடை எழுதுறான் என்றேன்
உந்த விசர்க்குணம்
படிக்கிற காலத்திலேயே
அவனுக்கு இருந்தது என்றார்
கடுமையாக கோபம் வருமே
அவனுக்கு என்றார்
இல்லை இப்ப கொஞ்சம் சாந்தம் என்றேன்.
அப்ப அவன் சூப்பி ரவி
எங்கே என்றேன்
ஆர்.....ஹாஹா
நான் தான் அது என்றார் அவர்

No comments:

Post a Comment