Monday, September 12, 2016

பெருமூச்சு




முதலில் கொல்லாதே
என்னை கொல்லாதே
பிறகு குத்தாதே குத்தாதே
அடுத்து
அப்பனை நம்பாத
செத்தான் செத்தான்
தகரங்கள் போத்தில் கண்ணாடிகள்
தாறுமாறாய்
உடைந்து விழும் சத்தம்


பதறி எழும்பி
பக்கத்து வீட்டுக்காரரையும்
தட்டி எழுப்பி
தாழ்வாரத்தில் கிடந்த
தடி இரண்டெடுத்து
கொடுக்கு கட்டி
கூக்குரல்
சண்டை குழறல்
சத்தம் வந்த பக்கம் ஓடினேன்
ஒரு நாலைந்து முற்றத்தில்
நாரி முறித்தாட
ஊரிப்பட்டது கைதட்ட
நிண்டு பார்த்தேன்
ஒண்டுமில்லை
இண்டைய சினிமா பாட்டுத்தான்
என்னை எழுப்பி
இவ்வளவிளைக்க ஓட வைச்சிருக்கு
மண்டை குழம்பி ஒண்டும்பேசாமல்
இல்லம் திரும்பினேன்
எங்கேயோ மெல்லிதாய்
தேன் கிண்ணத்தில்
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
பூவாடை வீசி வர பூத்த பருவமா
காற்றில் கலந்து கொண்டிருந்தது
எல்லாத்துக்குமாய் சேர்த்து
என்னிலிருந்து ஒரு பெரு மூச்சு

No comments:

Post a Comment