Monday, September 12, 2016

விலகி வழி விட்டேன்
வர்ணங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன
நதிகள் இரண்டு பாய்ந்துகொண்டிருந்தன
பறவைகள்
கூட்டம் கூட்டமாய்
எங்கிருந்தன!!
அருகே ஆயிரம் நிலவுகள் உரசிக்கொண்டு
இங்கேயுமா வானம்!!
இன்னும் விலகி ஓரமாய் நின்றேன்
இன்னதென்று உரைக்கமுடியா
அழகிய பட்சியொன்று
அதன் இனிய பாடலில்
நானுமிருந்தேன்..

No comments:

Post a Comment