Wednesday, July 6, 2016

வேதம்




தெய்வங்கள் விரும்பிய உணவை
நாம் அறிந்திருந்தோம்
கடவுளருக்கு
எந்த ஆடை அழகென்றும்
அளவு அழகு பார்த்து அறிந்திருந்தோம்
இதயம் தொடும்வரை
தெய்வங்களோடு பேசிபேசி
அன்பு மொழியொன்று ஆக்கியிருந்தோம்
நினைத்து நினைத்துப் போனோம்
நாங்கள் போகும்போதுதான்
அந்த ஆலயங்களில் மணியொலி
அந்தக்கடவுளருக்கு பள்ளியெழுச்சி
நெக்குருக கசிந்து நின்றோம்
மூலஸ்தானத்தையும் தாண்டி
எமக்கு ஒரு இடம்
தெய்வங்கள் தந்திருந்தன
ஆரத்தழுவி
அந்த முற்றத்தில்
முழுநாளும் நாம் பூஜை செய்திருந்தோம்
அந்த ஆலயத்தில்
நாங்கள் எல்லோரும்அர்ச்சகர்கள்
கற்பூர ஆராத்தி காட்டினோம்
கொன்றையிலை
புன்னையிலை
வில்வமிலை
வேப்பிலை
மாவிலை வரிசையில்
எருக்கலையை சேர்க்கிறேன் நான்.......
எருக்கலை மாடத்தை வணங்கிய முனியென
வரலாறு அமையட்டும்....

No comments:

Post a Comment