Wednesday, July 6, 2016

செம்மண் கறுப்பு



செம்மண்
எப்பொழுது பார்த்தாலும்
இச்சை தருவது
எதையாவது விதையென்று
எழுச்சி கொள்ளவைப்பது
தக்காளி வைத்துப்பார்
தங்கச்சங்கிலி தருவேன் என்றும்
பொயிலை வைத்துப்பார்
புதிய வீடு கட்டுவாய் என்றும்
வெங்காயம் வைத்துப்பார்
வெளிநாட்டு வாழ்க்கைதான் என்றும்
ஆசைதூண்டுவது போலிருக்கும்
ஓ! உண்மைதான்
கத்தரி வைப்போம் காடுபோல்
நடுவே கஞ்சா நடுவோம்
பக்கத்திலேய விற்றுக்
கோடி சம்பாதிக்க
காலம் கனிந்துளது இன்று என
தன் பத்தினியாள் கழுத்தில்
பளபளக்கும்
பத்துப்பவுண் தாலியை
பார்க்கிறது இக்கால பெருச்சாளி!

No comments:

Post a Comment