Sunday, July 17, 2016

வானம்



அவ்வப்போது பறக்கும் பட்டாம்பூச்சிகள்
வாலறுந்து
மின்சாரக் கம்பியில் தொங்கும் பட்டங்கள்
டவர்களின் உச்சியில் ஒளிரும்
மஞ்சள் சிவப்பு வெளிச்சங்கள்
திடிரென எழுந்து பறக்கும் கடதாசி
குளத்து வெளியில் காயும்
சலவைத் தொழிலாளியிடம் கொடுத்த
நம் எல்லோரதும் பல வர்ண ஆடைகள்
திருவள்ளுவர் சிலையின்
தலையிலிருக்கும் காகம்
மணிக்கூட்டுக் கோபுரத்தில் உச்சியில்
கூடு கட்டிக்கொண்டிருக்கும் புறாக்கள்
காதலிக்காக
கைக்குள்
பொத்தி வைத்திருக்கும் மின்மினி
வானம்
என் கையிலிருந்து தொடங்குகிறது

No comments:

Post a Comment