Sunday, July 17, 2016

ஓடிப்போனவனின் கதையிலிருந்து



ஓ! 
டாட்ரா கானகங்களே
ஹோ வன் லங்
ஹோ வன் தானை
வெளியே காட்டினீர்
எமக்காகவுமா
எமக்கும்
இரண்டு பேனாக்கள் தருகிறாயா
மூர்க்கத்துடன்
எதிர்த்து நின்றதும் வியட்நாம்
போருக்கு பயந்து
கைக்குழந்தை ஹோவன் லங்கை ஏந்தியபடி ஓடிய
ஹோவன் தானும் வியட்நாம்.
வியட்நாமை எழுதும் இரண்டு பேனாக்கள்
டாட்ரா முழுக்க
ஊரிழந்தவனின்ஏக்கம்
மனச்சாட்சிகளுக்கு இடையில்
நடந்தபோரில் இறந்து போன
ஹோவன் தானின் பிணங்கள்
டாட்ரா நிரம்ப
ஓடிப்போனவனை
வியட்நாமின் வீரர்களின் கல்லறைகள்
எழுந்து நின்று பார்க்கின்றன
ஹோவன் தன்
உணர்ச்சி மேலிட நிற்கின்றார்
ஹோவன் லங்
கானகங்களை பார்க்கின்றார்
ஓடிப்போனவனின்கதையில் இருந்தும்
தொடங்குகிறது ஒரு விடுதலை கீதம்
குறிப்பு...
வியட்நாமின் போர்க்காலத்தில் காட்டுக்குள் தன் கைகுழந்தையுடன் ஓடி தந்தையும் மகனும் நாற்பது ஆண்டு கழித்து சொந்த ஊர் வர நேர்ந்தபோது.

No comments:

Post a Comment