Sunday, July 17, 2016

தீர்க்கமற்ற பாடல்



காற்றில் அலைந்து சென்றேன்
கடதாசியாய்
துண்டு பிரசுரமென
ஒருவன் பார்த்தான் கிழித்தான்
இன்னொருவன்
பொறுக்கி பத்திரப்படுத்தினான்
மலராய் ஒரு செடியில்
இருந்து பார்த்தேன்
சம்பிரதாயங்கள் பறித்துச் சென்றன
ஒருநாள் வாழ்க்கையும் இல்லை
தெரு நாயாய்
எல்லா வீதியும் திரிந்தேன்
அங்கங்கு நக்கினேன்
ஏகப்பட்ட கல்லெறிகள்
காயங்கள்
ஏகப்பட்ட கேள்விகள்
தலைப்புக்களில் நான்
தீர்க்கமற்ற
பிறவியின்அச்சம் பரவுகிறது

No comments:

Post a Comment