Monday, December 19, 2016

சிறுத்தைகள் பணிந்த ஒரே ஒரு சிங்கம்















கண்ணோடு நிற்கின்ற
காலத்தின் உருவம்
நீ மண் வந்து போனாலே
நிம்மதி பிறக்கும்
விண்ணேறிக் கடந்து
வேதங்கள் சொன்னீர்
கண்ணீரில் எமைவிட்டு
ஏனய்யா போனீர்
முன்னின்று நீர் நடத்தும்
முழக்கத்தில் எதிரே
தன்னிலை தளர்ந்து
தடுமாற்றம் இருக்கும்
சிறுத்தைகள் பணிந்த
ஒரே ஒரு சிங்கம்
தேசத்தில் குரல்
அன்ரன் பாலசிங்கம்
வருத்தங்கள் உனை தின்ன
வானேறி வந்தீர்
தம்பி கரம்பற்றி அழைக்க
பாசத்தில் கரைந்தீர்
வருகின்ற வஞ்சக
சூழ்ச்சியை சொன்னீர்
இனி வரமாட்டேன்
சொல்லாமல் நெடும்தூரம் ஆனீர்
பரணிக்கு வழி சொல்லி
பக்கத்தில் இருந்து
நீர் பட்ட இன்னல்கள்
ஒன்றல்ல கோடி
தரணிக்கு எங்களின்
முகமாயும் இருந்தீர்
தலைமகன் இதயக்
குரலாயும் ஆனீர்
மரணம் பலமுறை
ஒத்திகை பார்த்தது
மலரும் தேசத்தை
பார்த்திட உயிர்த்தீர்
விலகும் பனியென
விதி நொந்து நின்றோம்
விடியல் கானலாய்
விடைபெற்றுபோனீர்
பூமி ரேகையில்
சாத்திரம் பார்த்தீர்
புலர்வுக்கு வழியிட
பூதலம் அளந்தீர்
புலத்துக்கும் நிலத்துக்கும்
புலரியின் தூதரே
நிலைத்தது நின்புகழ்
நீள் துயில் கொள்வீர்
தமிழர் தந்திரம் மந்திரம்
அன்ரன் பாலசிங்கம்
தமிழர் ராஜதந்திரி என்பது
உம் மங்கா நிரந்தரம்
வெள்ளைச்சியடலொடு
வேப்பமரக்காற்று
வேண்டிய நினதுளம்
நிச்சயம்
இங்குதான் எங்கேனும்
இளைப்பாறித்தூங்கும்

No comments:

Post a Comment