நீ முப்படை கொண்டு
களமாடினாய் என்று சொல்ல
எதிர்காலம்
அது ஒரு பொய் கற்பனை
என்று நம்ப வேண்டுமாயின்
இன்றைக்கு நீ
காளையை அடக்குகிற வரலாறு
பதியப்பட கூடாது
அப்போது
அன்றய ஏறு தழுவுதலும் கற்பனை ஆகும்
ஒரு கோடி ஜல்லிகட்டை ஈழத்தில்
நீ இழந்து விட்டாய் !
மொத்த தமிழனும்
நுகங்களில்
பூட்டப்பட்டு இருப்பது
எனக்கு தெரிகிறது
No comments:
Post a Comment