கதவு திறந்து
அறைச்சாளரம்
யாவும் திறந்து
வா என்றேன்
வரவில்லை
ஆவி நோக
அடங்கா வெம்மையில்
நான் வாட
எங்கே நிக்கிறாய்
கூவி அழைத்தேன்
சாளரம் வழி தேடினேன்
வேலிப்பூவரசின்
காய்ந்த இலை தடவி
கருகி விழுந்த புல் தடவி
முகத்தை சுழித்தபடி
மெல்லச் சாளரத்தால்
வந்தறையில் குந்திற்று காற்று
கடுகடுப்போடு
கதையை தொடக்கினேன்
என்னை உனக்கு தெரியாதோ
அழைத்தபோது
ஏன் அசுமாத்தமில்லை
காலி முகத்திலும்
கசூரினாவிலும்
காக்கை தீவிலும்
சாமரம் வீசும் உனக்கு
என் இளைப்பு எரிச்சல்
எப்படிப் புரியும்
வயல் ஒழுங்கைகளில்
தினம் சந்திக்கும் சோடிகளுக்கு
நீ தான் இதம் கொடுத்து
இனிப்பு ஊட்டுகிறாயாம்
காதல் கடிதமொன்றில்
உன்னையும் பற்றி
ஓரிரு வரிகள் கண்டேன்.
உன் அம்மா அற்புதம்
முற்றத்தில் முன் விறாந்தையில்
என் தலையணைக்கருகே
என் மனமறிந்து உலவுவாள்
இப்போதில்லை
அந்த இனிய சுகம்
நீயோ காதலர்க்கும்
கடும் போதைக்கும்
சரம்போல நிக்கிறாய்
என்று நீட்டினேன்
அறைச்சாளரம்
யாவும் திறந்து
வா என்றேன்
வரவில்லை
ஆவி நோக
அடங்கா வெம்மையில்
நான் வாட
எங்கே நிக்கிறாய்
கூவி அழைத்தேன்
சாளரம் வழி தேடினேன்
வேலிப்பூவரசின்
காய்ந்த இலை தடவி
கருகி விழுந்த புல் தடவி
முகத்தை சுழித்தபடி
மெல்லச் சாளரத்தால்
வந்தறையில் குந்திற்று காற்று
கடுகடுப்போடு
கதையை தொடக்கினேன்
என்னை உனக்கு தெரியாதோ
அழைத்தபோது
ஏன் அசுமாத்தமில்லை
காலி முகத்திலும்
கசூரினாவிலும்
காக்கை தீவிலும்
சாமரம் வீசும் உனக்கு
என் இளைப்பு எரிச்சல்
எப்படிப் புரியும்
வயல் ஒழுங்கைகளில்
தினம் சந்திக்கும் சோடிகளுக்கு
நீ தான் இதம் கொடுத்து
இனிப்பு ஊட்டுகிறாயாம்
காதல் கடிதமொன்றில்
உன்னையும் பற்றி
ஓரிரு வரிகள் கண்டேன்.
உன் அம்மா அற்புதம்
முற்றத்தில் முன் விறாந்தையில்
என் தலையணைக்கருகே
என் மனமறிந்து உலவுவாள்
இப்போதில்லை
அந்த இனிய சுகம்
நீயோ காதலர்க்கும்
கடும் போதைக்கும்
சரம்போல நிக்கிறாய்
என்று நீட்டினேன்
நிறுத்தென்று
தொடங்கியது காற்று
முட்டாள்
முற்றத்திருந்த
தாத்தா கால வேம்பை
கொளுத்த காசுக்கு
அறுத்தாய் குடித்தாய்
கும்மாளமடித்தாய்
ஏதுமுரைத்தாயா முன்னெனக்கு
லீசிங்கில்
வீட்டில் ஆளுக்கிரண்டு
மின் விசிறி
காலுக்கும் தலைக்கும் வைத்து
கால மோட்டும் உனக்கு
நானெதற்கு
பனை விசிறி
மறந்த உனக்கு
மல்லிகை மணத்துடன்
நான் வந்து
மெல்லிதாய் தடவவேண்டுமா
பண்டிகை பரவச சடங்கெல்லாம்
குளிரூட்டி வைத்து கொண்டாடி
பணப்பெருமை
பறை சாற்றும் உனக்கு
காதோரம்
சில்லென்று போகவேண்டுமா
இப்போதியலா
இனி வரும் மாரியில்
பத்து வேம்பு வை
அதுவரை நான் உன்னொடு
பழகுவதில் அர்த்தமில்லை
ஊடலுடன்
முன் வாசல் வழி
எங்கேயோ போனது காற்று.
தொடங்கியது காற்று
முட்டாள்
முற்றத்திருந்த
தாத்தா கால வேம்பை
கொளுத்த காசுக்கு
அறுத்தாய் குடித்தாய்
கும்மாளமடித்தாய்
ஏதுமுரைத்தாயா முன்னெனக்கு
லீசிங்கில்
வீட்டில் ஆளுக்கிரண்டு
மின் விசிறி
காலுக்கும் தலைக்கும் வைத்து
கால மோட்டும் உனக்கு
நானெதற்கு
பனை விசிறி
மறந்த உனக்கு
மல்லிகை மணத்துடன்
நான் வந்து
மெல்லிதாய் தடவவேண்டுமா
பண்டிகை பரவச சடங்கெல்லாம்
குளிரூட்டி வைத்து கொண்டாடி
பணப்பெருமை
பறை சாற்றும் உனக்கு
காதோரம்
சில்லென்று போகவேண்டுமா
இப்போதியலா
இனி வரும் மாரியில்
பத்து வேம்பு வை
அதுவரை நான் உன்னொடு
பழகுவதில் அர்த்தமில்லை
ஊடலுடன்
முன் வாசல் வழி
எங்கேயோ போனது காற்று.
No comments:
Post a Comment