Saturday, August 27, 2016

அர்த்தம்




நண்பர் ஒருவரின் மகள்
குமரியான குதூகலத்திற்கு
மனைவி சகிதம்
மாமியையும் கூடவே அழைத்து
ஆட்டோ அமர்த்தி
ஆலாத்தி எடுக்கும் நேரம்
கூட்டத்தோடு கூட்டமாய் இறங்கி
வாட்டி எடுக்கும் வெயிலுக்கு
வாய்க்கு இரண்டு பேணி
குளிர்பானம் வாங்கிவிட்டு
வசதியாய்த்தான் செய்கிறான்
வாய்க்குள் முணுமுணுத்து
மனைவியை முன்னேவிட்டு
மாதரோடு ஆராத்தி எடுக்க வைத்து
பலகாரம் கடித்து
பால் ரொட்டி கடித்து
பந்தியில் போயிருந்து
பார்வையை சுழலவிட்டேன்
பத்திருபது பரம ஏழைகள்
பசியாறிக் கொண்டிருந்தனர்
என் உள்ளத்தில் பேருவகை
வெட்கத்தை விட்டு
இரு தடவை போடச்சொல்லி
சலரோகம் மறந்து
பாயாசம் வடை வாழைப்பழம்வரை
உண்டு ஓர் திருப்தியுடன் எழும்பினேன்
மனைவியை அழைத்துச்சொன்னேன்
உறையில் வைத்த ஆயிரத்துடன்
இன்னும் ஒன்பதாயிரம் சேர்த்து
பெட்டையின் கையில் கொடு என்றேன்
அர்த்தமுடன் பார்த்தாள் மனையாளெனை.

No comments:

Post a Comment