Saturday, August 27, 2016

பதில்



சந்தங்கள் தேடி
சாற்றிடத் தமிழில்
ஒன்றுக்கு நூறாய்
உள்ளத்தை பிழிந்து
என்றைக்கும் பாவினில்
இழைத்திடாதொரு
இனிமையை கொண்டு
பல்லக்கிலேற்றி
பாவையை மயக்க
சொல்லுக்கு சொல்
சோமபானம் தடவி
வில்லை வளைக்க
வில்லங்கப்படாமல்
எல்லைவரை சென்று
இதங்கள் சேர்த்து
ஆயிரம் காதல்
கதைகள் தொட்டு
ஆங்கு முத்து
எடுத்து கோர்த்து
அழகு மயிலை
சாட்சி வைத்து
அற்புதத்தேரில்
ஏறி நின்று
தீண்டி தேனை
மயக்குமென்று
தேவிரதியை
கலந்து பேசி
தெளிவாய் மன்மதன்
செவ்வை பார்த்து
நாடியவளை சென்று
நல்ல பதில் எதிர்பார்த்து
நறுக்காய் இதை
அனுப்பி விட
நங்கையவள் தந்த பதில்
லொல்
என் செவி பிடித்த
இன்றைய நாகரிகம்
கொஞ்சம் வேகம் போதாது
பஞ்சம் வரை பாடும் கவியே
இன்றவள் சாய்வது
பல்சர் கரிஷ்மா பாய்வதில்தான்!
ஓ! !

No comments:

Post a Comment