Saturday, August 27, 2016

தேன் நிலவு





எட்டாம் வகுப்பில்
மொட்டவிழ்ந்த அவள்
மோகனச் சிரிப்பில்
மயங்கி
கட்டினால் இவள்தானென
கனவு நூறு கண்டு
கடிதம் குடுத்து
பதில் வரும்வரை
பசியிருந்து
ஒப்பேறிய காதலை
அவளும் நானும்
தாலி கட்டும்வரை
தடை உடைத்து செல்வதற்கு
கடந்த கால காதலர்கள்
கண்ட பல சாத்திரிகள் முன்
கை நீட்டி
காரியம் நிறைவேறும்
கைதொழுதால் என்ற கோயில்களில் நேர்த்தி வைத்து
காப்பு கட்டி காவடி கற்பூர சட்டியெடுத்து
முட்டுக் காலில் இருந்து
முந்நூறு மந்திரம் உச்சரித்து
வீட்டுக்கு நம் காதலை சொல்ல
ஆளமர்த்தி
அவரை அடிக்கடி ஆசுவாசப்படுத்தி
ஈற்றில் எச்சில் விழுங்கி விழுங்கி
எல்லாம் வீட்டில் கொட்டி
காற்றில் பறப்பது போலானோம்
கலியாண நாள்
கட்டினேன் நேற்றவள் கழுத்தில்தாலி
மாதுளம் பழமென மயங்கி
நின்றவளை
தேனிலவு தேதி சொன்னேன்
கசூரினா போகலாமா
சங்குப்பிட்டி பாலத்தில்
உரசி நின்று ஒரு செல்பி எடுக்கலாமா
காலி போய் காற்று வாங்குவோமா
கண்டி நுவரெலியா
கதகதப்பு தேடலாமா
என் கனவுகளை அடுக்கிவிட்டேன்
புன்னகையுடன்
அவள் சொன்னாள்
எவனாவது ஒருவன்
மறைந்திருந்து படமெடுத்து
இத்தனை வருட நம் காதலுக்கு
இணைய தளங்களில்
கள்ளக்காதலர்கள் களியாட்டமென பெயர் சூட்டுவான்
தேவையா என்றாள்
தெளிவாய் இருந்தது
தேன் நிலவு எனக்கு.

No comments:

Post a Comment