வதனி ரீச்சர்
வதனி கவனி
இதுவரை நீ வதனி
இனி
தடைதாண்டி
போட்டி பரீட்சை
விடைதாண்டி
வேலையற்ற
பட்டதாரியென்ற
பழி தாண்டி
படிப்பித்தல் நியமனத்தில்
படியேறுகின்ற ரீச்சர்வதனி
அரச நியமனங்கள்
ஆயிரம் இருந்தாலும்
ஆண்டவனுக்கு அருகில்
அமரும் அதிஸ்டம்
அம்மணி உனக்கு
காலை ஒன்பது மணிக்கே
இதுவரை தொடங்கிய உன் நாள்
நாளையிலிருந்து
அதிகாலை நான்கிற்கே ஆரம்பம்
பள்ளியெழுந்து நீ
அம்மாளாச்சி போலவே
தெருவில் இறங்கப்போகிறாய்
காலை வணக்கம் சொல்லியே
உன்னை ஒரு களங்கமற்ற கூட்டம்
சுற்றிவரத்தொடங்கும்
கைபற்றியிழுக்கும்
புன்னகை பூரிப்பு மௌனம் என
வெள்ளைச்சீருடைக்குள் தோன்றும்
பாசைகளையெல்லாம்
நீ மொழிபெயர்த்தாகவேண்டும்
வதனி கவனி
நேற்றுவரை நீவதனி
இன்று நீ ரீச்சர்வதனி
இனி நீ ஆயிரம் கண்களுக்குள் நடக்கிறாய்
காயதாய் இருக்கும் உன் காதல்கூட
கனியாது போகலாம்
காட்டுமல்லிகை போல
உன் சின்னக்கனவுகள்
வாசம் நுகரப்படாமலே
வாழ்ந்துமுடிந்தும் போகலாம்
ஆழமான உள்ளங்களின் கதவு
உனக்கு அகன்று திறந்திருக்கிறது
ஆங்கோர் உயர் பீடத்தில்
நீ ஓய்வு பெறும் போது
சூட்டுவதற்கான
மண்ணில் அழியா மகா கிரீடங்கள்
அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றது
எல்லாவற்றின் முன்பும்
உன் கற்பித்தல் என்ற
கனவுப் பாதையில் நடக்கத்தொடங்குகிறாய்
அதிபரை கரைக்கும் மருந்து
ஆங்காங்கு வந்து
இடைக்குள் செருகும்
கற்களை அகற்றும் கைவசியம்
சேடிகளின் வாயால்
உன் சிறப்புரைக்கவைக்கும்
காட்டின் நடுவில் இருக்கும்
புற்றில் சீறுகின்ற
ராஜநாகத்தின் நவரத்தினகல்
எல்லாம் வரப்பெற்ற வல்லமையாகுவாய்
மருதோண்டிவைத்து
மகிழ்ந்திருந்த உன் உள்ளங்கை
வெண்கட்டி விளைந்திருக்கும்
கைதடுமாறி உன் கன்னங்களில் கூட
சின்னமாயிருக்கும்
எல்லாமே
எண்ணற்றோர் எதிர்காலத்தை
நீ தீர்மானித்துக்கொண்டிருப்பதன் அழகு
இனி
பச்சை இல்லமா மஞ்சள் இல்லமா
சிவப்பு இல்லமா உனது
உன் ஆடைக்கனவுகளில்
அரைவாசி நாளையோடு முடிகின்றது
இனிச் சேலைக்குள் இருந்தே
ஆயிரம் வானவிற்களுக்கு வர்ணம்
கொடுக்கப்போகிறாய்
சுற்றுலாவிற்கு உன்னை முதல்வர் அழைத்து
முற்றிலும் நீயே பொறுப்பென்பார்
அப்போதெல்லாம்
திருமணம் ஆகாமலே
திரும்பி வந்து இறங்கும்வரை
பத்து நல்லதங்காளாய்
இருநூறு பிள்ளைகளுக்கு
தாயாக மாறவேண்டும்
ஆயாவாயும் மாறவேண்டும்
கறுத்தப்புள்ளிகளின்றி உன் பயணமிருந்தால்
அடுத்துனக்கு ஆசனங்கள் தேடிவரும்
தடுட்தாட்கொள்கின்ற சந்தர்ப்பங்களும்
தானாக விளையலாம்
நீ படுக்கமுடியாது இனி
பாடவேளைகள்தான் கனவாய் வரும்
படபடப்பும் இருக்கும்
புதிதாயும் ஏதும் கொண்டு செல்லவேண்டும்
உலகப்புதினங்களை உற்றுநோக்கவேண்டும்
அல்வா எடிசன்கள்
ஆபிரகாம் லிங்கன்கள் அலெக்ஸ்சாண்டர்கள் பிரபாகரன்கள்
ஓசாமாக்கள் தெரேசாக்கள் டயானாக்கள்
மூன்று இலைகளோடு உன் முன்
வகுப்பறையில் வந்திருக்கும்
எல்லாவற்றுக்கும்
உன்னிடம் பதிலிருக்கவேண்டும்
ஊமையானால்
உள்ளத்தில் வழங்கப்பட்ட உனக்கான உயர்பதவி
மெல்ல மெல்ல அகற்றப்படும்
என்ன செய்யப்போகிறாய்
நேற்றுவரை நீ வதனி
இனி நீ ரீச்சர் வதனி
கன்ன மயிர் பழுத்து
கடைசிப்பெருங்காலத்துள் நுழைகின்ற
எந்தனது நெஞ்சில்
சங்கரப்பிள்ளை சோதிநாதன் விந்தன்
மனோகரி குமார் அருள்நேசன் சசிகலா சிவகௌரி
சிறீசெல்வராஜா மோட்சலிங்கம் கனகேந்திரம் என்றொரு பட்டியல் நீள்கிறது
இவர்கள் என் ஆசிரியர்கள் இன்னும் பலர்
பக்கங்கள் பலவற்றை அலங்கரிப்பர்
ரீச்சர்வதனி
உந்தனது காலத்தில்
எத்தனை உள்ளங்களில் உட்காரப்போகிறாய்!!
இதுவரை நீ வதனி
இனி
தடைதாண்டி
போட்டி பரீட்சை
விடைதாண்டி
வேலையற்ற
பட்டதாரியென்ற
பழி தாண்டி
படிப்பித்தல் நியமனத்தில்
படியேறுகின்ற ரீச்சர்வதனி
அரச நியமனங்கள்
ஆயிரம் இருந்தாலும்
ஆண்டவனுக்கு அருகில்
அமரும் அதிஸ்டம்
அம்மணி உனக்கு
காலை ஒன்பது மணிக்கே
இதுவரை தொடங்கிய உன் நாள்
நாளையிலிருந்து
அதிகாலை நான்கிற்கே ஆரம்பம்
பள்ளியெழுந்து நீ
அம்மாளாச்சி போலவே
தெருவில் இறங்கப்போகிறாய்
காலை வணக்கம் சொல்லியே
உன்னை ஒரு களங்கமற்ற கூட்டம்
சுற்றிவரத்தொடங்கும்
கைபற்றியிழுக்கும்
புன்னகை பூரிப்பு மௌனம் என
வெள்ளைச்சீருடைக்குள் தோன்றும்
பாசைகளையெல்லாம்
நீ மொழிபெயர்த்தாகவேண்டும்
வதனி கவனி
நேற்றுவரை நீவதனி
இன்று நீ ரீச்சர்வதனி
இனி நீ ஆயிரம் கண்களுக்குள் நடக்கிறாய்
காயதாய் இருக்கும் உன் காதல்கூட
கனியாது போகலாம்
காட்டுமல்லிகை போல
உன் சின்னக்கனவுகள்
வாசம் நுகரப்படாமலே
வாழ்ந்துமுடிந்தும் போகலாம்
ஆழமான உள்ளங்களின் கதவு
உனக்கு அகன்று திறந்திருக்கிறது
ஆங்கோர் உயர் பீடத்தில்
நீ ஓய்வு பெறும் போது
சூட்டுவதற்கான
மண்ணில் அழியா மகா கிரீடங்கள்
அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றது
எல்லாவற்றின் முன்பும்
உன் கற்பித்தல் என்ற
கனவுப் பாதையில் நடக்கத்தொடங்குகிறாய்
அதிபரை கரைக்கும் மருந்து
ஆங்காங்கு வந்து
இடைக்குள் செருகும்
கற்களை அகற்றும் கைவசியம்
சேடிகளின் வாயால்
உன் சிறப்புரைக்கவைக்கும்
காட்டின் நடுவில் இருக்கும்
புற்றில் சீறுகின்ற
ராஜநாகத்தின் நவரத்தினகல்
எல்லாம் வரப்பெற்ற வல்லமையாகுவாய்
மருதோண்டிவைத்து
மகிழ்ந்திருந்த உன் உள்ளங்கை
வெண்கட்டி விளைந்திருக்கும்
கைதடுமாறி உன் கன்னங்களில் கூட
சின்னமாயிருக்கும்
எல்லாமே
எண்ணற்றோர் எதிர்காலத்தை
நீ தீர்மானித்துக்கொண்டிருப்பதன் அழகு
இனி
பச்சை இல்லமா மஞ்சள் இல்லமா
சிவப்பு இல்லமா உனது
உன் ஆடைக்கனவுகளில்
அரைவாசி நாளையோடு முடிகின்றது
இனிச் சேலைக்குள் இருந்தே
ஆயிரம் வானவிற்களுக்கு வர்ணம்
கொடுக்கப்போகிறாய்
சுற்றுலாவிற்கு உன்னை முதல்வர் அழைத்து
முற்றிலும் நீயே பொறுப்பென்பார்
அப்போதெல்லாம்
திருமணம் ஆகாமலே
திரும்பி வந்து இறங்கும்வரை
பத்து நல்லதங்காளாய்
இருநூறு பிள்ளைகளுக்கு
தாயாக மாறவேண்டும்
ஆயாவாயும் மாறவேண்டும்
கறுத்தப்புள்ளிகளின்றி உன் பயணமிருந்தால்
அடுத்துனக்கு ஆசனங்கள் தேடிவரும்
தடுட்தாட்கொள்கின்ற சந்தர்ப்பங்களும்
தானாக விளையலாம்
நீ படுக்கமுடியாது இனி
பாடவேளைகள்தான் கனவாய் வரும்
படபடப்பும் இருக்கும்
புதிதாயும் ஏதும் கொண்டு செல்லவேண்டும்
உலகப்புதினங்களை உற்றுநோக்கவேண்டும்
அல்வா எடிசன்கள்
ஆபிரகாம் லிங்கன்கள் அலெக்ஸ்சாண்டர்கள் பிரபாகரன்கள்
ஓசாமாக்கள் தெரேசாக்கள் டயானாக்கள்
மூன்று இலைகளோடு உன் முன்
வகுப்பறையில் வந்திருக்கும்
எல்லாவற்றுக்கும்
உன்னிடம் பதிலிருக்கவேண்டும்
ஊமையானால்
உள்ளத்தில் வழங்கப்பட்ட உனக்கான உயர்பதவி
மெல்ல மெல்ல அகற்றப்படும்
என்ன செய்யப்போகிறாய்
நேற்றுவரை நீ வதனி
இனி நீ ரீச்சர் வதனி
கன்ன மயிர் பழுத்து
கடைசிப்பெருங்காலத்துள் நுழைகின்ற
எந்தனது நெஞ்சில்
சங்கரப்பிள்ளை சோதிநாதன் விந்தன்
மனோகரி குமார் அருள்நேசன் சசிகலா சிவகௌரி
சிறீசெல்வராஜா மோட்சலிங்கம் கனகேந்திரம் என்றொரு பட்டியல் நீள்கிறது
இவர்கள் என் ஆசிரியர்கள் இன்னும் பலர்
பக்கங்கள் பலவற்றை அலங்கரிப்பர்
ரீச்சர்வதனி
உந்தனது காலத்தில்
எத்தனை உள்ளங்களில் உட்காரப்போகிறாய்!!
No comments:
Post a Comment