Saturday, January 14, 2017

இருத்தல்

உடைந்து விழுகின்றன
பெருஞ்சுவரின் கற்கள்
இப்போது
உள்ளிருந்தே உதைக்கப்படுகின்றது
கட்டியவர்களும் சிக்குண்டனராம்
அவ்வப்போது இடுக்குகளினூடே
புறப்படும் இனிய கீதம்
சாமகானத்தின் உருப்படிகளை
தேடியலைகின்றது
அவ்வப்போது இடுக்குகளினூடே
நசியுண்டு பாயும்
ஒளி வட்டங்களின் கீற்று
ஸ்பரிசத்தால் துளிர்களை
நீவிவிடும் விடாயில்
வால்களின் தீப்பந்தம் அணைகின்றது
உள்ளிருந்துதைப்பில்
மலர்ந்திருக்கும் தாமரை
இதழ்களின் நடுவில்
பிரசவக்குழந்தையின் அழுகையில்
இரவின் நிறத்தில்
வாசத்தில்
வெண்மை பரவும் மல்லிகையில்
காத்திருக்கச் சொல்கிறது
உடைந்துவிழும் பெருஞ்சுவரின் கற்கள்

No comments:

Post a Comment