Saturday, January 14, 2017

ஏற இறங்க நூறு

அவசரமாய் அலுவலொன்று
அழைப்பொன்றில் வந்துவிட
யாழ்ப்பாண வசு பிடிக்க
வசுதரிப்பில் போய் நிற்க
காலடியில் கறிச் சென்று
கண்டியூர் பக்கமாக
வந்ததொன்று பாட்டும்
கேட்டிணுமாய் படிவரையும்
கூட்டமுமாய்
கைநீட்டி வாஞ்சையுடன்
கூறுங்கள் யாழுக்கோ
வாருங்கோ ஏறுங்கோ
படியடியில் தொங்குகின்ற
பையனின் பல்வரிசை
இடிபடும் சனத்துக்குள்
இடியப்பமாய் சிக்குண்டு
எதுவரைக்கும் போவதுநான்
முடிபறக்க பாய்கின்ற
முழு இறாத்தல் வசுவுக்குள்
அடிவயிற்றில் நோவெடுக்கும்
என நினைத்தும் அவசரமே
என்றெண்ணி
அதன் படியில் கால்வைக்க
சாவச்சேரியில்
விதிவந்து விபத்தாகி
பதின் உயிர்கள்
பறந்துவிட்ட
கதிகலங்கும்
சேதி மீண்டும்
இடிபோல நெஞ்சில்
சடுதியாய் எழுந்து நிற்க
இருவிழிபிதுங்கி என்
ஈரல்வரை கிடுகிடுக்க
முறிகண்டிப்பிள்ளையாரை
முதலாவதாய் வேண்டிக்கொண்டேன்
முந்துகின்ற வசு ஒவொன்றும்
முடிவெழுதும் வேளைபோல்
பிள்ளைகுட்டிகளை பேரன்பு
மனுசியினை என்னுள்ள
எண்ண வைக்கும்
மடுமாதா மனசுக்குள்
பளைவரையும் இந்த
உயிர்படும்பாடு ஒன்றரிரண்டா
அங்கும் கொஞ்சம்
அள்ளி அடைந்து
ஆலப்போல் வேலப்போல்
ஆலம்விழுதுபோல்
மாமன் நெஞ்சில்
பாட்டுப்போட்டு
பாச நெஞ்சு பரிதவிக்க
பம்மிங்கில் ஏற
பதகளிப்பட்டு
அங்கங்கங்கு பிடித்து
முன்னால குனிஞ்சு
முகப்புக்கண்ணாடியால்
முகவரியை பார்க்க
விண்ணால இறங்கி
விசுக்கென்று வந்ததுபோல்
சன்னலோடுரசி சறுக்கியொன்று
போகும்போது
உச்சிலடி அம்மனை
ஊரிலுள்ள பிள்ளையாரை
நல்லூர் கந்தனை
நான் நினைந்துருகி நின்று
நாவற்குழி தாண்டும்போது
சுண்டல் காரனோ சுடச்சுட என்கிறான்
அண்ணல் நான்படும்
அவஸ்த்தைகளை
சுண்டலே நீயறிவாயா
ஏற இறங்க காசு நூறுதான்
பத்திருபதாயிரத்துக்கு நேத்தி
செத்துப்போய் நான்
வசு ஸ்ராண்டில் இறங்குகையில்
றைவர் முகம் பார்த்தேன்
அது இறைவர் முகம்தான்!!

No comments:

Post a Comment