Saturday, January 14, 2017

முற்றம்?

எட்டுக்கோடு கிளித்தட்டு
கிட்டிப்புள்ளு
ஒப்புச்சொல்லி
இழுபறிப்படும்
இனிய வட்டக்கிளிப்பு
வனிதையரின் கெந்திக்கோடு
கள்ளன் பொலிஸ்
கண்ணைப்பொத்தி
கிண்ணைப்பொத்தி இதுயார்
மரம்மட்டை மாமரம்
மல்லிகைப்பந்தல்
மாமியின் சேலைக்குள் ஒளிந்து
கூவென தேடும் ஒளிச்சுப்பிடிச்சு
எல்லாம் போச்சு
முற்றம் காலையில் இருப்பதுபோல்
கால்படாமல்
மணல்அளைந்து சுவடின்றி
மனம் மகிழ்ந்த கால்களின்றி
அந்நாளை மறந்து
ஆளில்லா வீடுபோல
அரவமற்று கிடக்கிறது
கூடியிருந்து உள்ளே
குமர் கிழவி பூட்டன்
ஆத்தை அப்பு
அத்தை சித்தி சித்தப்பு
ஈசிச்செயரால் ஒன்று
இடுப்பைபிடித்து ஒன்று
சுவரில் சாய்ந்து ஒ;ன்று
சுருட்டு பத்தி ஒன்று
உடும்பு பிடித்து ஒன்று
உச்சா போவதுபோல் ஒன்று
கட்டிலில் கிடந்தபடி ஒன்று
காலை பிளந்தபடி ஒன்று
கடைவாயில் வழிந்தோட
வக்கணை ஓப்பாரிகள்
வாள்வெட்டு வஞ்சனைகள்
மேக்கப்பில் சிந்துகின்ற
றெடி ரேக் கண்ணீரை
அண்ணாந்து நம்பி
அடுத்தபாக ஆவலுடன்
உறங்கப்போகிறது
ஊரெல்லாம் புகுந்து
யாரோ உழுகிறார்
ஏதோ விதைக்கிறார்
பாழ் பட்ட நிலம்
பட்டும் திருந்தவில்லை.

No comments:

Post a Comment