அந்த மனிதரை காணவில்லை
அவருக்கான அழைப்பு
எல்லோரிடமும் இருப்பதாக உணர்கிறேன்.
அவர் இங்கே
அடுத்த கணமே வேண்டப்படுகிறார்.
என் மீது சுமத்தப்படும்
எல்லா இம்சைகளின்போதும்
நான் அம்மனிதரை தேடுகிறேன்.
அவரிருந்த இடம்
எவருக்குமில்லாமல் இருக்கின்றது.
அநேகம்பேர்
அநேக சந்தர்ப்பங்களில்
அவரை தேடிக்கொள்ள விரும்புகிறார்கள்.
No comments:
Post a Comment