Sunday, July 3, 2016

அம்மாவின் நாட்கள்



துாரத்தில்
எங்கோ கேட்கும்வெடிச்சத்தங்களால்
நான் எத்தனை முறை
செத்திருப்பேன் என்பது
எனக்கு மட்டுமே தெரியும்

நீ எங்கோ நின்றிருந்தாலும்
வெடியோசை கேட்குமிடத்தில்தான்
நீ நிற்கிறாயென எண்ணி
இதயம் எங்கெங்கோ மோதுண்டு
விழுந்து களைத்திருக்கும்.
நான் உன் அன்னையல்லவா மகனே!
இப்போது
வெடிச்சத்தங்களும் இல்லை

நீயுமில்லையடா மகனே!

No comments:

Post a Comment