Sunday, July 3, 2016

பஞ்சமம்





ராகங்கள் தெரிய வந்தபோது
பரபரப்பும் பதட்டமும்.
கச்சேரிகள் களைகட்ட
தனி ஆவர்த்தனங்களில்
மந்தைவெளி இழந்திருக்கும்
ஓர் சுதந்திரப்பாடகனை.

குயில்களுக்கு தெரியாது
தாம் பஞ்சமத்தில்பாடுவது
என்றும் ஒரே கூவல்
ஒரே இனிமை
எல்லோரும் கேட்கிறார்கள்.
பஞ்சமத்தை குயில் அறியும்வரை
குயில்பாட்டு தெவிட்டாது.

No comments:

Post a Comment