Sunday, July 3, 2016


கனவின் வாசம் - பொன்.காந்தன்
















சாலை  விரிந்து கிடக்கிறது
காற்று
எஞ்சி கிடக்கிறது
கிளைகளிலும் வெளிகளிலும்.......
சிந்தப்படாத மாய புன்னகை
இன்னும்  உதடுகளில் ஒளிந்து கிடக்கிறது .
தொடாத வர்ணங்கள்
நதிகளும் மலைகளும் கானகமும் வானமும்
சந்திக்கும் இடத்தில் இருக்க கூடும்
இதயம் ஒன்றுக்குள் மூன்றாவது துடிப்பு
வாசல் வரை வந்து மௌனமாய் இருக்க கூடும்
ஒரு அழகிய புதிய நாள்
நாட் காட்டியின் கதவு மறைவில்
நாணியபடி நிற்க கூடும்
அவ்வளவு அவசரமாய்
எங்கு புறப்படுகிறாய் !!

No comments:

Post a Comment