Sunday, July 3, 2016

பத்தினி




உன்னை பிரிந்திருக்கும்
இந்தநாட்களில்
ஒவ்வொரு வசந்தமும்
கடந்துபோகும் போது
சலனப்பட்டு
திரும்பி பார்த்து பார்த்து
வந்துகொண்டிருக்கும்என் தருணங்களில்
பத்தினிகள்
தெய்வமாகி இருப்பதன்
மெய்ப்பொருளை உணர்கிறேன்.
நாம் போற்றி பூசித்துக்கொண்டிருப்பது
சில நிர்ப்பந்தங்களையும் கூட...

No comments:

Post a Comment