இப்போதெல்லாம்
திருவிழாவுக்கு போவதை தவிர்த்துக்கொள்கிறேன்.
அவளின் வயதில்தோழிகளொடு
சுற்றிவரும் அழகிகளால்
நான் மிகவும் தனிமையை உணர நிர்ப்பந்தமாகிறேன்.
எப்பொழுதும் இன்றைய திருவிழாக்கள்
ஒரு அழகி இல்லாமல்
அவஸ்த்தைபடுவதை பார்க்கின்றேன்.
மணிக்கடையிலும்
தீர்த்தக்கேணியிலும்
வடக்கு வீதி மரத்தடிகளிலும்
நான் அழுவதற்கென்றே ஆயிரம் நினைவுகளை
விட்டுச்சென்றிருக்கிறாள்.
இப்போதெல்லாம் அநேகம்பேர்
திருவிழாக்களை தவிர்க்கின்றார்கள்
கடவுளின் மீதும் கோபம்தான்.
No comments:
Post a Comment