Sunday, July 3, 2016

மாமாவின் பதில்கள்




அவன் இப்போது
பள்ளி செல்லத்தொடங்கிவிட்டான்.
மாமா எங்கே என்று கேட்பான்
இறந்துவிட்டார் என்பேன்.
எங்கே புதைத்தீர்கள்
என்று கேட்பான்
இடத்தை சொல்வேன்.
காட்டுங்கள் என்பான்
கல்லறை உடைக்கபட்டுவிட்டது என்பேன்.
யாரால்என்று கேட்பான்
சொல்லித்தானே ஆகவேண்டும்.
காட்டுங்கள் என்பான்
காட்டித்தானே ஆகவேண்டும்.
ஏன் எதற்கு எப்படி இது நடந்தது
ஆயிரம் கேள்விகள் அவனுக்குள் எழும்.
நான் சொல்லித்தானே ஆகவேண்டும்
நான் என்ன செய்ய.
ஒன்று அவனுக்கு நான்
தெளிவாக சொல்வேன்
‘‘கல்லறையை   மனிதர்கள்

உடைப்பதில்லைஎன்று

No comments:

Post a Comment