Sunday, July 3, 2016

வரலாறு









               சிலர் கடவுளும் தாமும்
              ஒரே காலத்தவர்கள் என்று மகிழ்ந்தார்கள்.
             வேறு சிலர்
              உலகத்தின் முதல் வார்த்தை
             தம்முடையதென்று பெருமிதப்படுகின்றார்கள்.
இன்னும் கிறிஸ்த்துவுக்கு முன் பின் என்று
உலக மாந்தர்கள்
தமக்கு வரலாற்றுக்குறிப்பு வைத்துக்கொள்கிறார்கள்.
நம்மில் சிலருக்கோ
நேற்று நடந்ததே ஞாபகத்தில் இல்லை
இப்படி யாரும்
உலகத்தில் யாரும் தடுமாறியதில்லைப்போல்..

No comments:

Post a Comment