Sunday, July 3, 2016

வாழ்வின் கணம்






எங்கோ போகுமவன்
ஏதோ நினைப்பில்
சாலைச்செடியின் நுனி கிள்ளி
வழி எங்கும் எறிந்தும்
வாயில் சிறுதுளிர் மென்றும்
எங்கோ போய்த்தொலைந்தான்.
இலையுமறியா
அவனுமறியாக் கணங்கள்
வாழ்வில் இப்படி எத்தனை எத்தனை..

No comments:

Post a Comment