Sunday, July 3, 2016

மர்ம மனிதன்



கபாலிகளுக்கு நடுவில்
வேதாளங்களுக்கு நடுவில்
தெறிகளுக்கு நடுவில் 
விஸ்வரூபங்களுக்கு நடுவில்
சுவாதியை ஒருவன்
இழுத்து கழுத்தை அறுத்து
கொன்றுவிட்டு போனானாம்
இப்போது அவன் பெயர் மர்ம மனிதன்
நுங்கம் பாக்கத்தில்
ரயில் நிலையத்தில்
சவுக்கு மரத்தின் ஒரு சிறு சுள்ளியை கூட
முறித்து துரத்த முடியாத நாயகர்கள்
ஒரு ரயிலை தூக்கி அவன் மீது இருந்திருக்க வேண்டும்
தண்டவாளங்களை பிடுங்கி எடுத்து
அவன் மண்டையில் நொறுக்கி இருக்கவேண்டும்
ஆளுக்கு ஒரு இருக்கையை
பெயர்த்து எடுத்து
அவனை கிழித்திருக்க வேண்டும்
மர்ம மனிதன் என்று சொல்லிக்கொண்டு
விசில் அடியுங்கள்
நுங்கம் பாக்கம் ரயில் நிலைய ஆம்பிளைகளே
திரையில் ஒரே உதையில்
பத்தாயிரம் பேரை வீழ்த்தும் நாயகன் தோன்றுவான் !

No comments:

Post a Comment