Sunday, July 3, 2016

சொல்லாதது





வார்த்தைகள் இல்லை என்றான பிறகும்
எழுத வைப்பது எது
என்னை சும்மா விடு
உனக்கு என்ன வேண்டும்
விரும்பினால்
என்னை சிலுவையில் அறைந்துவிடு
எனக்காக கூட
மூச்சுவிட விரும்பாதிருக்கின்றேன்
எப்படி காத்திருந்தபோதும்
தொலைவிலும் தெரியவில்லை.
வெறுமனே கிடக்கிற
சாலைகளை தெரிகிறதா
அழுவதற்கு இடமில்லாத பூமியில்
முகத்தை எப்படி வைத்துக்கொள்வது
கடைசியாய் இருக்கும் முகவரியில்
ஏதேனும் சொல்வதற்கென்று வருகின்றவன்
எடுத்துச்செல்வதற்கென்று
என்னிடம் ஏதும் இருக்குமென நம்பவில்லை!!

No comments:

Post a Comment