வீடு கட்டித்தந்தென்ன
ஜன்னல்களையும்
கதவுகளையும்
இறுக பூட்டித்தானே வாழ்கின்றோம்.
கதவுகளையும்
ஜன்னல்களையும் பூட்டியென்ன
ஓநாயின் வீட்டில்
வழி எதுவென்று
அதற்குத்தானே தெரியும்.
யாருடைய
வீடாக இருந்தாலென்ன
எப்போதும் அது தட்டப்பட்டால்
அதுவேறு யாருடையதோ வீடுதான்.
வீடுகள் கட்டும்போது
வீடுகள் உடைக்கப்படுகையில்
எவை உடைந்தன
எப்படி வீழ்ந்தன
எல்லாமே தேவையாகின்றது
நம்முடையவீட்டை
நாம் கட்டுவதற்கு.....
No comments:
Post a Comment